- பா. சுரேஷ் பாபு
தந்தை விரல் பிடித்து நடந்த
மழலை நாட்களின் ஈர நினைவு
சிறகு முளைக்காத சிட்டுக் குருவியின்
வானமாகத் திகழும் தந்தையின் அன்பு
நெற்றி வியர்வை சிந்தி அவர்
சேர்த்த சேமிப்பு மகளின் சிரிப்பு
கல் முள் நிறைந்த பாதையில்
கவசமாய் நின்ற இமய மலை
ஆயிரம் உறவுகள் வந்து போயினும்
ஆலமரமாய் நிழல் தருபவர் தந்தை
பெண்மையின் முதல் நாயகன் இன்றும்
பேசாத மௌனத்திலும் பொங்கும் பாசம்

கண்ணீர்த் துளியைத் துடைக்கும் கரம்
காலங்கள் கடந்தும் மாறாக் காதல்
தந்தைமையின் தியாகத்தில் ஒளிரும் வாழ்வு
(சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த பா. சுரேஷ் பாபு 116 முறை இரத்த தானம், உடல் உறுப்பு தானம் மற்றும் முடி தானம் செய்துள்ளார். 21 உலக சாதனைகளைப் படைத்து, 9 உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ள இவரது பெயர், இந்திய அரசின் பத்ம விருது மற்றும் தமிழக அரசின் கலைமாமணி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 172 நாடுகளின் நாணயங்கள் மற்றும் தபால் தலைகளைச் சேகரித்து வரும் இவர், சென்னை நாணயவியல் சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர். 42 சிறுகதைகள் மற்றும் ஆயிரக்கணக்கான கவிதைகளை எழுதியுள்ள இவர், தற்போது திருவள்ளுவரைப் பின்பற்றி 1330 'புதிய குறள்களை' எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மாரத்தான் வீரராகவும், விவித் பாரதி மற்றும் இலங்கை FM-ன் சிறப்பு கவிஞராகவும் மிளிரும் இவரது சாதனையைப் போற்றி இந்திய அஞ்சல் துறை இவரது புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் தலையை (My Stamp) வெளியிட்டுள்ளது).
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
சிந்தனைச் சிதறல்.. நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமைவது எது தெரியுமா?
Heritage day.. தமிழ்ப் பாரம்பரியத்தைப் போற்றுவோம்.. கொண்டாடுவோம்!
{{comments.comment}}