"என் பக்கத்துலேயே வச்சிருந்திருப்பேனே"..  பாத்திமா விஜய் ஆண்டனி வேதனை!

Oct 10, 2023,10:11 AM IST

சென்னை: நீ 16 வயதிலேயே எங்களை விட்டுப் பிரிவாய் என்று தெரிந்திருந்தால் உன்னை எங்கேயும் அனுப்பாமல் என் பக்கத்திலேயே வச்சிருந்திருப்பேனே என்று விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி வேதனையுடன் கூறியுள்ளார்.


இசையமைப்பாளர் - நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா விஜய் ஆண்டனி சமீபத்தில் தற்கொலை மூலம் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். அனைவரையும் இது அதிர வைத்தது. 16 வயதேயான மீரா விஜய் ஆண்டனியின் இந்த எதிர்பாராத முடிவு அனைவரையும் வேதனைப்பட வைத்து விட்டது.




இந்த  நிலையில் தனது மகளின் பிரிவிலிருந்து இன்னும் அவரது தாயார் பாத்திமா விஜய் ஆண்டனி வெளிவரவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து பாத்திமா ஒரு போஸ்ட்ட் போட்டுள்ளார். அதில் அவர்  உருக்கமாக கூறியிருப்பதாவது:


நீ 16 வயது வரைதான் வாழ்வாய் என்று தெரிந்திருந்தால்,  உன்னை எங்கேயும் அனுப்பாமல், என் பக்கத்திலேயே வைத்திருந்திருப்பேனே. சூரியனையும் சந்திரனையும் கூட உனக்குக் காட்டாமல் என் பக்கத்திலேயே உன்னை வைத்து பார்த்திருப்பேனே. உன்னுடைய நினைவுகளில் நான் தினசரி மூழ்கிக் கொண்டிருக்கிறேன்.  செத்துக் கொண்டிருக்கிறேன். நீ இல்லாமல் என்னால் வாழ முடியவில்லை. சீக்கிரம் அப்பா, அம்மாவிடம் வந்து விடும்மா. உனக்காக லாரா காத்துக் கொண்டிருக்கிறாள்.. லவ் யூ தங்கமே என்று கூறியுள்ளார்  பாத்திமா விஜய் ஆண்டனி.

சமீபத்திய செய்திகள்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

news

உன்னை நினைப்பதையே என் மனம் காதலிக்கிறது...!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

அறிவுடையார் எல்லாம் உடையார்.. சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day 2026!

news

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்