சென்னை: நீ 16 வயதிலேயே எங்களை விட்டுப் பிரிவாய் என்று தெரிந்திருந்தால் உன்னை எங்கேயும் அனுப்பாமல் என் பக்கத்திலேயே வச்சிருந்திருப்பேனே என்று விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி வேதனையுடன் கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் - நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா விஜய் ஆண்டனி சமீபத்தில் தற்கொலை மூலம் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். அனைவரையும் இது அதிர வைத்தது. 16 வயதேயான மீரா விஜய் ஆண்டனியின் இந்த எதிர்பாராத முடிவு அனைவரையும் வேதனைப்பட வைத்து விட்டது.
இந்த நிலையில் தனது மகளின் பிரிவிலிருந்து இன்னும் அவரது தாயார் பாத்திமா விஜய் ஆண்டனி வெளிவரவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து பாத்திமா ஒரு போஸ்ட்ட் போட்டுள்ளார். அதில் அவர் உருக்கமாக கூறியிருப்பதாவது:
நீ 16 வயது வரைதான் வாழ்வாய் என்று தெரிந்திருந்தால், உன்னை எங்கேயும் அனுப்பாமல், என் பக்கத்திலேயே வைத்திருந்திருப்பேனே. சூரியனையும் சந்திரனையும் கூட உனக்குக் காட்டாமல் என் பக்கத்திலேயே உன்னை வைத்து பார்த்திருப்பேனே. உன்னுடைய நினைவுகளில் நான் தினசரி மூழ்கிக் கொண்டிருக்கிறேன். செத்துக் கொண்டிருக்கிறேன். நீ இல்லாமல் என்னால் வாழ முடியவில்லை. சீக்கிரம் அப்பா, அம்மாவிடம் வந்து விடும்மா. உனக்காக லாரா காத்துக் கொண்டிருக்கிறாள்.. லவ் யூ தங்கமே என்று கூறியுள்ளார் பாத்திமா விஜய் ஆண்டனி.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}