சென்னை: உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய வீரர் டி குகேஷூக்கு ரூ.11.45 கோடி வழங்குகிறது சர்வதேச செஸ் சம்மேளனம். மேலும் அவருக்கு வாழ்த்துகளும் தொடர்ந்து குவிந்து வருகின்றன.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான இந்திய கிராண்ட் மாஸ்டர் டி குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். 18 வயதான டி குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலகிலேயே இளம் வயதில் செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் தனது 22 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்தே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது தனது 18 வயதில் முறியடித்துள்ளார் டி குகேஷ்.
சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரெனை வீழ்த்தி வெற்றி பெற்றார் டி குகேஷ். இதன் மூலம் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற 2வது இந்திய வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார். முதல் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் என்பது நினைவிருக்கலாம்.
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற டி குகேஷூக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து இருக்கின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டி குகேஷூக்கு ரூ.5 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார். உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்ற தமிழக வீரர் குகேஷூக்கு ரூ.11.45 கோடி வழங்குகிறது என்று சர்வதேச செஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, டெஸ்லா தலைவரும், எக்ஸ் தலத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க்கும், குகேஷுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு
தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!
எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு
அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்..!
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்
{{comments.comment}}