சென்னை: உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய வீரர் டி குகேஷூக்கு ரூ.11.45 கோடி வழங்குகிறது சர்வதேச செஸ் சம்மேளனம். மேலும் அவருக்கு வாழ்த்துகளும் தொடர்ந்து குவிந்து வருகின்றன.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான இந்திய கிராண்ட் மாஸ்டர் டி குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். 18 வயதான டி குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலகிலேயே இளம் வயதில் செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் தனது 22 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்தே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது தனது 18 வயதில் முறியடித்துள்ளார் டி குகேஷ்.

சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரெனை வீழ்த்தி வெற்றி பெற்றார் டி குகேஷ். இதன் மூலம் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற 2வது இந்திய வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார். முதல் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் என்பது நினைவிருக்கலாம்.
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற டி குகேஷூக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து இருக்கின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டி குகேஷூக்கு ரூ.5 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார். உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்ற தமிழக வீரர் குகேஷூக்கு ரூ.11.45 கோடி வழங்குகிறது என்று சர்வதேச செஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, டெஸ்லா தலைவரும், எக்ஸ் தலத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க்கும், குகேஷுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை
ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?
தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!
ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்
அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?
சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?
{{comments.comment}}