நடிகர் கார்த்தி நடிப்பில்..சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து.. டப்பிங் பணி துவக்கம்!

Mar 10, 2025,12:17 PM IST

சென்னை:  கார்த்தி நடிப்பில் சர்தார் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வரும் நிலையில், அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.


கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் இரண்டு கதாபாத்திரங்களுக்கு வித்தியாசம் கொடுத்து கார்த்தியின் எதார்த்தமான நடிப்பில் வெளியான  சர்தார் திரைப்படம் ரசிகர்களுக்கு மாபெரும் திரை விருந்தாக அமைந்திருந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் இதன் இரண்டாவது பாகம் தயாராகி வருகிறது. 




இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் மீண்டும் நடிகர் கார்த்தி சந்திரபோஸ் மற்றும் விஜய் பிரகாஷ் என்ற இரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜோடியாக ஆஷிகா ரங்கநாத், பிரியங்கா மோகன் ஆகியோர் கதாநாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் எஸ்.ஜே சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமணன் தயாரித்து வருகிறார்.  கார்த்தியின் நெருங்கிய நண்பரான இவர் முதல் பாகத்தையும் தயாரித்திருக்கிறார் என்பது நினைவிருக்கலாம். 


இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பிரம்மாண்ட செட் அமைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. மேலும் இப்படம் ஜூலை மாதம் திரைக்கு வர  இருப்பதாக கூறப்படுகிறது. இதனால்  கார்த்தி மற்றும் எஸ் ஜே சூர்யாவின் மிரட்டலான நடிப்பிற்காகவும் ரசிகர்கள் படத்தின் வெளியீட்டிற்காக எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.


இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாராகி வரும்  சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


முன்னதாக நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி வா வாத்யாரே படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் தயாரித்திருக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்தாலும் படத்தின் வெளியீடு தேதி குறித்து எந்த அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்