சென்னை: கார்த்தி நடிப்பில் சர்தார் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வரும் நிலையில், அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் இரண்டு கதாபாத்திரங்களுக்கு வித்தியாசம் கொடுத்து கார்த்தியின் எதார்த்தமான நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் ரசிகர்களுக்கு மாபெரும் திரை விருந்தாக அமைந்திருந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் இதன் இரண்டாவது பாகம் தயாராகி வருகிறது.
இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் மீண்டும் நடிகர் கார்த்தி சந்திரபோஸ் மற்றும் விஜய் பிரகாஷ் என்ற இரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜோடியாக ஆஷிகா ரங்கநாத், பிரியங்கா மோகன் ஆகியோர் கதாநாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் எஸ்.ஜே சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமணன் தயாரித்து வருகிறார். கார்த்தியின் நெருங்கிய நண்பரான இவர் முதல் பாகத்தையும் தயாரித்திருக்கிறார் என்பது நினைவிருக்கலாம்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பிரம்மாண்ட செட் அமைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. மேலும் இப்படம் ஜூலை மாதம் திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கார்த்தி மற்றும் எஸ் ஜே சூர்யாவின் மிரட்டலான நடிப்பிற்காகவும் ரசிகர்கள் படத்தின் வெளியீட்டிற்காக எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாராகி வரும் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முன்னதாக நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி வா வாத்யாரே படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் தயாரித்திருக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்தாலும் படத்தின் வெளியீடு தேதி குறித்து எந்த அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
இந்திய மாணவருக்கு கைவிலங்கிட்டு.. தரையில் கிடத்தி.. அமெரிக்க விமான நிலையத்தில் அராஜகம்
தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!
35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}