குடியரசுத் தலைவர் மாளிகையில் திருமண விழா.. வரலாற்றிலேயே முதல் முறை.. யார் அந்த அதிர்ஷ்டசாலி?

Feb 06, 2025,06:47 PM IST

டெல்லி: இந்தியக் குடியரசுத் தலைவரின் மாளிகையான ராஷ்டிரபதி பவனில், குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு அதிகாரியான பூனம் குப்தாவின் திருமணம் நடைபெறவுள்ளது.


அவரது சிறந்த சேவை காரணமாக  வரலாற்றிலேயே முதல் முறையாக பூனம் குப்தா - அஸ்வின் குமார் இடையிலான திருமண வைபவம், ராஷ்டிரபதி பவனில்  நடைபெறவுள்ளது.


குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு படை அதிகாரி தலைமையேற்று பணிபுரிந்து வரும்  சிஆர்பிஎஃப் துணை கமாண்டராக இருக்கிறார் பூனம் குப்தா. அவருக்கும்  சி ஆர்பிஎஃப் துணை கம்மாண்டராக பணியாற்றும் அஸ்வின் குமாருக்கும் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி ஜனாதிபதி மாளிகையில் திருமண வைபோக நிகழ்ச்சி நடைபெற உள்ளது.




குடியரசுத் தலைவர் மாளிகையில் இதுவரை திருமண நிகழ்ச்சி எதுவுமே நடந்தது இல்லை. அந்த வகையில், வரலாற்றிலேயே முதல் முறையாக குடியரசுத் தலைவர் மாளிகையில் திருமண விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி திரௌபதி முர்மு அனுமதியுடன் பூனம் குப்தாவின் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை குடியரசு மாளிகை வெளியிட்டுள்ளது. 


பூனம் குப்தாவின் சிறந்த சேவை, நாட்டிற்கான அர்ப்பணிப்பு, கடமை தவறாமல் பணியாற்றுதல், நடத்தை விதிகளை முறையாக பின்பற்றுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக பூனம் குப்தாவின் திருமண நிகழ்ச்சிக்கு குடியரசுத் தலைவர் அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் குடியரசு மாளிகையில் திருமணம் செய்து கொண்ட முதல் பெண் என்ற பெருமையைப் பெற்று சாதனை படைக்கவுள்ளார் பூனம் குப்தா. 




பூனம் குப்தா திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமே கலந்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

news

வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

அதிகம் பார்க்கும் செய்திகள்