குடியரசுத் தலைவர் மாளிகையில் திருமண விழா.. வரலாற்றிலேயே முதல் முறை.. யார் அந்த அதிர்ஷ்டசாலி?

Feb 06, 2025,06:47 PM IST

டெல்லி: இந்தியக் குடியரசுத் தலைவரின் மாளிகையான ராஷ்டிரபதி பவனில், குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு அதிகாரியான பூனம் குப்தாவின் திருமணம் நடைபெறவுள்ளது.


அவரது சிறந்த சேவை காரணமாக  வரலாற்றிலேயே முதல் முறையாக பூனம் குப்தா - அஸ்வின் குமார் இடையிலான திருமண வைபவம், ராஷ்டிரபதி பவனில்  நடைபெறவுள்ளது.


குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு படை அதிகாரி தலைமையேற்று பணிபுரிந்து வரும்  சிஆர்பிஎஃப் துணை கமாண்டராக இருக்கிறார் பூனம் குப்தா. அவருக்கும்  சி ஆர்பிஎஃப் துணை கம்மாண்டராக பணியாற்றும் அஸ்வின் குமாருக்கும் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி ஜனாதிபதி மாளிகையில் திருமண வைபோக நிகழ்ச்சி நடைபெற உள்ளது.




குடியரசுத் தலைவர் மாளிகையில் இதுவரை திருமண நிகழ்ச்சி எதுவுமே நடந்தது இல்லை. அந்த வகையில், வரலாற்றிலேயே முதல் முறையாக குடியரசுத் தலைவர் மாளிகையில் திருமண விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி திரௌபதி முர்மு அனுமதியுடன் பூனம் குப்தாவின் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை குடியரசு மாளிகை வெளியிட்டுள்ளது. 


பூனம் குப்தாவின் சிறந்த சேவை, நாட்டிற்கான அர்ப்பணிப்பு, கடமை தவறாமல் பணியாற்றுதல், நடத்தை விதிகளை முறையாக பின்பற்றுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக பூனம் குப்தாவின் திருமண நிகழ்ச்சிக்கு குடியரசுத் தலைவர் அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் குடியரசு மாளிகையில் திருமணம் செய்து கொண்ட முதல் பெண் என்ற பெருமையைப் பெற்று சாதனை படைக்கவுள்ளார் பூனம் குப்தா. 




பூனம் குப்தா திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமே கலந்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!

news

தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?

news

ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்

news

எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?

news

விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி

news

இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்

news

திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!

news

எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்

news

நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்