டெல்லி: இந்தியக் குடியரசுத் தலைவரின் மாளிகையான ராஷ்டிரபதி பவனில், குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு அதிகாரியான பூனம் குப்தாவின் திருமணம் நடைபெறவுள்ளது.
அவரது சிறந்த சேவை காரணமாக வரலாற்றிலேயே முதல் முறையாக பூனம் குப்தா - அஸ்வின் குமார் இடையிலான திருமண வைபவம், ராஷ்டிரபதி பவனில் நடைபெறவுள்ளது.
குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு படை அதிகாரி தலைமையேற்று பணிபுரிந்து வரும் சிஆர்பிஎஃப் துணை கமாண்டராக இருக்கிறார் பூனம் குப்தா. அவருக்கும் சி ஆர்பிஎஃப் துணை கம்மாண்டராக பணியாற்றும் அஸ்வின் குமாருக்கும் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி ஜனாதிபதி மாளிகையில் திருமண வைபோக நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் இதுவரை திருமண நிகழ்ச்சி எதுவுமே நடந்தது இல்லை. அந்த வகையில், வரலாற்றிலேயே முதல் முறையாக குடியரசுத் தலைவர் மாளிகையில் திருமண விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி திரௌபதி முர்மு அனுமதியுடன் பூனம் குப்தாவின் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை குடியரசு மாளிகை வெளியிட்டுள்ளது.
பூனம் குப்தாவின் சிறந்த சேவை, நாட்டிற்கான அர்ப்பணிப்பு, கடமை தவறாமல் பணியாற்றுதல், நடத்தை விதிகளை முறையாக பின்பற்றுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக பூனம் குப்தாவின் திருமண நிகழ்ச்சிக்கு குடியரசுத் தலைவர் அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் குடியரசு மாளிகையில் திருமணம் செய்து கொண்ட முதல் பெண் என்ற பெருமையைப் பெற்று சாதனை படைக்கவுள்ளார் பூனம் குப்தா.

பூனம் குப்தா திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமே கலந்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
டி20 உலகக்கோப்பையில் திருப்பம்.. ‘புறக்கணிப்பு’ முடிவிலிருந்து பாகிஸ்தான் யூ-டர்ன்?
Propse Day: காதலுக்கு முன்பு.. அன்பை வெளிப்படுத்துங்க.. அதை உணர்த்துங்க!
பொறுமையை சோதிக்கும் கூட்டணிக் கட்சிகள்.. அமைதியாக இருக்கும் திமுக.. என்ன நடக்கும்?
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட்:பிப்ரவரி 12ல் மதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: வைகோ
தமிழகத்தில் ஆட்சியாளர்களை எதிர்த்து எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது: ஜி.கே.வாசன் பேட்டி
ராமதாஸ் பாமக வந்தால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்...திருமாவளவன் உறுதி
கிச்சனில் இருக்கும்போது கவனம் தோழியரே.. எண்ணெய் தீ விபத்தை.. தடுப்பது எப்படி?
ஒரு வாரத்துக்கு நகைக் கடை பக்கமே போகாமல் இருந்தால் தங்கம் விலை குறையுமா!?
பிப்ரவரி 17-ல் தமிழக இடைக்கால பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
{{comments.comment}}