குடியரசுத் தலைவர் மாளிகையில் திருமண விழா.. வரலாற்றிலேயே முதல் முறை.. யார் அந்த அதிர்ஷ்டசாலி?

Feb 06, 2025,06:47 PM IST

டெல்லி: இந்தியக் குடியரசுத் தலைவரின் மாளிகையான ராஷ்டிரபதி பவனில், குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு அதிகாரியான பூனம் குப்தாவின் திருமணம் நடைபெறவுள்ளது.


அவரது சிறந்த சேவை காரணமாக  வரலாற்றிலேயே முதல் முறையாக பூனம் குப்தா - அஸ்வின் குமார் இடையிலான திருமண வைபவம், ராஷ்டிரபதி பவனில்  நடைபெறவுள்ளது.


குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு படை அதிகாரி தலைமையேற்று பணிபுரிந்து வரும்  சிஆர்பிஎஃப் துணை கமாண்டராக இருக்கிறார் பூனம் குப்தா. அவருக்கும்  சி ஆர்பிஎஃப் துணை கம்மாண்டராக பணியாற்றும் அஸ்வின் குமாருக்கும் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி ஜனாதிபதி மாளிகையில் திருமண வைபோக நிகழ்ச்சி நடைபெற உள்ளது.




குடியரசுத் தலைவர் மாளிகையில் இதுவரை திருமண நிகழ்ச்சி எதுவுமே நடந்தது இல்லை. அந்த வகையில், வரலாற்றிலேயே முதல் முறையாக குடியரசுத் தலைவர் மாளிகையில் திருமண விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி திரௌபதி முர்மு அனுமதியுடன் பூனம் குப்தாவின் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை குடியரசு மாளிகை வெளியிட்டுள்ளது. 


பூனம் குப்தாவின் சிறந்த சேவை, நாட்டிற்கான அர்ப்பணிப்பு, கடமை தவறாமல் பணியாற்றுதல், நடத்தை விதிகளை முறையாக பின்பற்றுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக பூனம் குப்தாவின் திருமண நிகழ்ச்சிக்கு குடியரசுத் தலைவர் அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் குடியரசு மாளிகையில் திருமணம் செய்து கொண்ட முதல் பெண் என்ற பெருமையைப் பெற்று சாதனை படைக்கவுள்ளார் பூனம் குப்தா. 




பூனம் குப்தா திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமே கலந்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

குடையை ரெடியா எடுத்து வச்சுக்கோங்க...தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வெளுக்குமாம்!

news

சேலத்தில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரி மனு... என்ன கிழமை தெரியுமா?

news

மசோதாவை கிடப்பில் போட்டு வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

news

20 வது ஆண்டாக நிதிஷ் ஆட்சி.. பத்தாவது முறையாக பதவியேற்பு.. சாதித்தார் நிதீஷ் குமார்

news

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.. மீண்டும் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்

news

உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

விவசாயிகளுக்கான ₹309 கோடி எங்கே... வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? : அண்ணாமலை கேள்வி!

news

கூட்டணியை வலுவாக்க அதிமுக தீவிரம்.. கட்சிகளுடன் சூடுபிடிக்கும் ரகசியப் பேச்சுக்கள்

news

துரைசிங்கம் Coming back?.. மீண்டும் போலீஸ் அவதாரம் எடுக்கிறார் சூர்யா.. ஆவேஷம் இயக்குநருக்காக!

அதிகம் பார்க்கும் செய்திகள்