மதுரை: மதுரை அலங்காநல்லூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து கொடியசைத்து முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி வைத்தார்.
ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு விழாவிற்கு பின்னர் கீழக்கரையில் அமைத்துள்ள மைதானத்தில் முதல் ஜல்லிக்கட்டு உலகத் தரத்துடன் தொடங்கியது. பிரமாண்ட கிரிக்கெட் போட்டியைப் போன்ற தோற்றத்தை இது காட்சி தந்ததால் மக்கள் வித்தியாசமான அனுபவமாக இதை உணர்ந்தனர்.
ஜல்லிக்கட்டு அரங்கத்தைத் திறந்து வைத்து விழா உரையாற்றிய பின்னர் பச்சைக் கொடி காட்டி ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்வர் தொடங்கி வைத்தார். முதல் காளையாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து பிற காளைகள் சீறிப் பாய போட்டி களை கட்டியது.
காளைகளை அடக்கி முதல் பரிசு பெறும் வீரருக்கும், சிறந்த காளைக்கும், மகிந்திரா தார் ஜீப் காரும், ரூ. 1 லட்சம் ரொக்கமும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
சூப்பர் பரிசுகள்
முதல் பரிசு தவிர, காளைக்கும், மாடு பிடி வீரருக்கும் 2வது பரிசாக ஒரு பைக் மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் பணம் வழங்கப்பட உள்ளது. போட்டியில் சிறந்து விளங்கும் வீரர் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு வழக்கம் போல, தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், அண்டா, சைக்கிள், பீரோ, பிரிட்ஜ், டிவி, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
இந்த அரங்கம் அமைக்கப்பட்டதன் மூலம் ஜல்லிக்கட்டு போட்டிற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் பெருமிதத்துடன் கூறி வருகின்றனர். இப்போட்டியினை 5000 பேர் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பத்தாயிரம் பேர் வரை கூட அமர முடியுமாம். வருகை தரும் பார்வையாளர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முதன் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியினைக் காண மாற்றுத்திறாளிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள்
மாற்றுத் திறனாளிகளுக்காக வீல் சேர் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், காளைகளுக்கு தேவையான தீவனங்களும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இவ்வரங்கை திறந்து வைக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை தர உள்ளார். இவரை தொடர்ந்து பல முக்கிய பிரமுகர்களும் வருவார்கள் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 2000த்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போட்டி நடைபெறும் மைதானத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்துள்ளனர். ஏராளமான பெண்களும் ஸ்டேடியத்தின் க ாலரியில் அமர்ந்து போட்டியை உற்சாகமாக கண்டு களிக்கின்றனர். சிறப்பான பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளதால் மிகவும் பாதுகாப்பாகவும் போட்டியை ரசிக்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைத்துள்ளது.
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
{{comments.comment}}