மதுரை: மதுரை அலங்காநல்லூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து கொடியசைத்து முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி வைத்தார்.
ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு விழாவிற்கு பின்னர் கீழக்கரையில் அமைத்துள்ள மைதானத்தில் முதல் ஜல்லிக்கட்டு உலகத் தரத்துடன் தொடங்கியது. பிரமாண்ட கிரிக்கெட் போட்டியைப் போன்ற தோற்றத்தை இது காட்சி தந்ததால் மக்கள் வித்தியாசமான அனுபவமாக இதை உணர்ந்தனர்.

ஜல்லிக்கட்டு அரங்கத்தைத் திறந்து வைத்து விழா உரையாற்றிய பின்னர் பச்சைக் கொடி காட்டி ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்வர் தொடங்கி வைத்தார். முதல் காளையாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து பிற காளைகள் சீறிப் பாய போட்டி களை கட்டியது.
காளைகளை அடக்கி முதல் பரிசு பெறும் வீரருக்கும், சிறந்த காளைக்கும், மகிந்திரா தார் ஜீப் காரும், ரூ. 1 லட்சம் ரொக்கமும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
சூப்பர் பரிசுகள்

முதல் பரிசு தவிர, காளைக்கும், மாடு பிடி வீரருக்கும் 2வது பரிசாக ஒரு பைக் மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் பணம் வழங்கப்பட உள்ளது. போட்டியில் சிறந்து விளங்கும் வீரர் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு வழக்கம் போல, தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், அண்டா, சைக்கிள், பீரோ, பிரிட்ஜ், டிவி, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
இந்த அரங்கம் அமைக்கப்பட்டதன் மூலம் ஜல்லிக்கட்டு போட்டிற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் பெருமிதத்துடன் கூறி வருகின்றனர். இப்போட்டியினை 5000 பேர் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பத்தாயிரம் பேர் வரை கூட அமர முடியுமாம். வருகை தரும் பார்வையாளர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முதன் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியினைக் காண மாற்றுத்திறாளிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள்
மாற்றுத் திறனாளிகளுக்காக வீல் சேர் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், காளைகளுக்கு தேவையான தீவனங்களும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இவ்வரங்கை திறந்து வைக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை தர உள்ளார். இவரை தொடர்ந்து பல முக்கிய பிரமுகர்களும் வருவார்கள் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 2000த்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போட்டி நடைபெறும் மைதானத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்துள்ளனர். ஏராளமான பெண்களும் ஸ்டேடியத்தின் க ாலரியில் அமர்ந்து போட்டியை உற்சாகமாக கண்டு களிக்கின்றனர். சிறப்பான பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளதால் மிகவும் பாதுகாப்பாகவும் போட்டியை ரசிக்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைத்துள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}