நாகை: அக்கரைப்பேட்டை, வெள்ளப்பள்ளம், மருதூர் கிராமங்களை சேர்ந்த 30 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் அடுத்தடுத்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலை கண்டித்து அப்பகுதி மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக மீனவர்கள் அத்துமீறி வந்ததாக கூறி ஒவ்வொரு முறையும் இலங்கை கொள்ளையர்களால் தாக்குதல் நடத்தப்படும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. அதே சமயத்தில் மீனவர்களின் உடைமைகளையும் பறித்து சென்று விடுகின்றனர் இதனால் மீன் பிடி தொழிலில் ஈடுபட முடியாமல் மீனவர்கள் தவிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த தாக்குதல் நடைபெறாமல் தடுக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறது. இருப்பினும் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

அந்த வகையில் இன்று அக்கரைப்பேட்டை, வெள்ளப்பள்ளம், செருதூர், உள்ளிட்ட மூன்று கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற் கொள்ளையர்கள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகையிலிருந்து 30 மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது அங்கிருந்து வந்த இலங்கை கடற் கொள்ளையர்கள் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் படகில் இருந்த வலை, மீன் பிடி உபகரணங்கள் என மூன்று முதல் நான்கு லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்து சென்றனர்.இதனால்
காயமடைந்த மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் தவித்தனர். பின்னர் படுகாயங்களுடன் வந்த 20 மீனவர்கள் சிகிச்சைக்காக நாகை அரசு கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற் கொள்ளையர்களின் இந்த தாக்குதலை கண்டித்து செருதூர், வெள்ளப்பள்ளம், மீனவர்கள் வேலை நிறுத்தத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயத்தில் மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், இழந்த பொருள்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
என்னது பிரியாணி இல்லையா?...தேர்தல் விலைப்பட்டியலில் பிரியாணி 'மிஸ்சிங்': அரசியல் கட்சிகள் அதிர்ச்சி
பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்
காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்
புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்
சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
கேஸ் சிலிண்டர் பெற இனி biometric கட்டாயம்...மத்திய அரசு அதிரடி
திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை
{{comments.comment}}