பிட்டர் கார்ட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பாகற்காய்.. ஒரு அற்புதமான மருத்துவ குணம் கொண்ட காயாகும். பாகற்காய் பற்றிய சில முக்கிய தமிழ்ப் பழமொழிகள் அவற்றின் விளக்கங்கள் பற்றி பார்ப்போம்..
பாகற்காய் என்றாலே ஒரே கசப்பு என்பதுதான் அனைவருக்கும் மனதில் தோன்றும்.ஆனால், பாகற்காயை உணவில் சேர்த்துக்கொள்வதனால் அதனுடைய நன்மைகள் ஏராளம். அறுசுவைகளான இனிப்பு-sweet , புளிப்பு-sour, துவர்ப்பு-astringent , கசப்பு-bitter , உப்பு- (உவர்ப்பு) salt, கார்ப்பு- (உறைப்பு) spicy , இதில் கசப்பு என்பதும் ஒரு சுவை தானே. இந்த ஆறு சுவைகளும் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தையும், ஆற்றலையும் சரியான அளவில் வழங்குகின்றன.
தமிழ் பண்பாட்டில் பாகற்காயை அடிப்படையாகக் கொண்டு சில பழமொழிகள் மற்றும் சொலவடைகள் உள்ளன. பாகற்காய் கசப்பு தன்மை கொண்டிருந்தாலும் அது உடலுக்கு தரும் ஆரோக்கிய நன்மைகளைப் போல வாழ்க்கையின் கசப்பான நிகழ்வுகள் நம் வாழ்க்கைக்கு நல்ல அனுபவங்களே என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது இந்த பழமொழிகள்.
பழமொழிகள்:
1. பத்திய முறிவுக்கு பாகற்காய் :

நமக்கு உடல் நலம் சரியில்லாமல் நோய்வாய்ப்பட்டிருக்கும் பொழுது உணவு கட்டுப்பாடு அதாவது பத்தியம் மேற்கொள்வோம். அந்த உணவு கட்டுப்பாட்டில் ஏற்படும் சில தவறுகளை சரி செய்து உடலுக்கு நலம் சேர்க்கும் காயாக பாகற்காய் விளங்குகிறது.
2. "கசந்தாலும் பாகற்காய் காறினாலும் கருணைக்கிழங்கு "
பாகற்காய் கசப்பாக இருந்தாலும், கருணைக்கிழங்கு நாக்கில் அரிப்பு எடுத்தாலும்,அவை இரண்டின் மருத்துவ குணம் மற்றும் சுவையை உணர்ந்தவர்கள் அதனை மிகவும் விரும்பி உணவில் சேர்த்துக் கொள்வார்கள். பாகற்காயில் உள்ள கசப்பு தன்மை உடலுக்கு தரும் ஆரோக்கிய நன்மைகளைப் போல வாழ்க்கையில் ஏற்படும் கசப்பான அனுபவங்களும் நம் மனதை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்று நன்மை தரும் என்பதை இப் பழமொழி உணர்த்துகிறது.
3. "பாகற்காய்க்கு உப்பு பதம் அறிந்து போடு "
பாகற்காயை சமைக்கும் பொழுது அதனுடைய கசப்பு குறைய வேண்டும் என்றால் அதற்கு ஏற்ற அளவில் உப்பு சேர்த்து சமைக்க வேண்டும். வாழ்வில் கசப்பான அனுபவங்கள் ஏற்படும் பொழுது அதற்கு தகுந்த மனப்பக்குவம் இருந்தால் அதிலிருந்து மீண்டு வரலாம் என்பதை இப் பழமொழி உணர்த்துகிறது.
4. "பாவமும் கசப்பும்"
பாகற்காயின் கசப்பு எவ்வளவு வெல்லம் சேர்த்து சமைத்தாலும் முழுமையாக மாறாது அதனுடைய கசப்புத் தன்மை சிறிது குறையும். ஆனால், முழுமையாக கசப்பு போகாது. சுவை சிறிது மாறலாம்.ஆனால் அதன் இயல்பு மாறாது. இந்தப் பழமொழியை மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கும் முன்னோர்கள் ஒப்பிட்டு கூறியுள்ளனர். மனிதன் வாழ்வில் செய்யும் நல்லதும், கெட்டதும் அவனை விட்டு பிரியாது என்பதே இந்த கருத்தின் மையம். மனிதன் செய்த தவறை முழுமையாக நீக்கி விட முடியாது அது வெயிலில் குடை பிடிப்பதே போல ஒரு தற்காலிக நிவாரணம் மட்டுமே அளிக்கும்.
உண்மையான மாற்றம் மனிதனின் மனசாட்சியிலும், அவனுடைய செயல்களிலும் அவற்றை வெளிப்படுத்துவதிலும், இருக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. 'பாவம் செய்யாதிரு மனமே ' என்பதை உணர்த்துகிறது. இது வாழ்க்கையை நெறிப்படுத்தும் ஒழுக்க பாடமாகும்.
மனிதன் தனது எண்ணங்கள், சொற்கள், செயல்கள் ஆகியவற்றில் பொறுப்புடன் இருந்தால் மட்டுமே அமைதியான வாழ்க்கையை வாழ முடியும்.
நம் முன்னோர்கள் கூறிய ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு அர்த்தம் உண்டு இல்லையா?.. ஃபிரண்ட்ஸ்..
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
கந்துவட்டி கமலா (ஒரு நிமிடக் கதை - 12)
உணவு பழக்கமும் பழமொழிகளும்.. சூப்பர் காய்.. பாகற்காய்.. கசந்தாலும் உடம்புக்கு நல்லது!
அடுத்தவர்களுக்கு உதவுதல் (Giving/ Helping others as Worship)
ADMK to TVK: தவெக நோக்கி படையெடுக்கும் அதிமுகவினர்.. முதல்வர் விஜய் திட்டம்தான் என்ன?
Karnataka Power Trasnsition: கர்நாடகாவில்.. சித்தராமையா விலகுகிறார்.. முதல்வராகும் டி.கே.சிவகுமார்
CM Vijay Returns to Chennai: ராகுலை சந்திக்காமல்.. சென்னை புறப்பட்ட முதல்வர் விஜய்.. என்ன காரணம்?
சோனியா, ராகுல் காந்தியை சந்திக்கும் திட்டத்தை ரத்து செய்தார் முதல்வர் சி. ஜோசப் விஜய்!
டொனால்ட் டிரம்ப் முகஜாடையில் உள்ள எருமை மாடு.. பக்ரீத் குர்பானியிலிருந்து விலக்கு!
மேகதாது அணை பூமி பூஜையை அனுமதிக்கக் கூடாது.. பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் கோரிக்கை
{{comments.comment}}