சென்னையில் சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடையணிந்து போராட்டம்

Aug 28, 2025,12:39 PM IST
சென்னை : சென்னை எழிலகத்தில் சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடையணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் சென்னை ரிப்பன் மாளிகை முன்பாக தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து 14 நாட்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக, கோர்ட் உத்தரவுடன் போலீசார் அவர்களை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்நிலையில் இன்று எழிலகம் வாசலில் சத்துணவுப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முறையான சம்பளம் வழங்குதல், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். காலியாக உள்ள 60,000 க்கம் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். குறைந்தபட்சமாக ரூ.6750 ஓய்வூதியம் வேண்டும் என்பவை சத்துணவு ஊழியர்களின் பிரதான கோரிக்கைகளாக உள்ளன. கருப்பு உடையணிந்து ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 



தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஏழு கட்ட போராட்டம் ஆகஸ்ட் 21ம் தேதி துவங்கியது. முதல் கட்டமாக, மாவட்ட தலைநகரங்களில் ஆகஸ்ட் 21ம் தேதியன்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. ராமநாதபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் அதிகமானவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அக்டோபர் 20ம் தேதி திருச்சியில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். 

தொடர்ச்சியாக தற்செயல் விடுப்பு போராட்டம், சென்னையில் பேரணி, மாவட்ட தலைநகரங்களில் வேலைநிறுத்தம், 2026ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தொடர்  வேலை நிறுத்தம் என அடுத்தடுத்த போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் சத்துணவு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... வானிலை மையம் எச்சரிக்கை!

news

தீவிரம் அடைந்து வரும் வடகிழக்கு பருவமழை... முதல்வர் முக ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோனை!

news

பெங்களூரு - ஓசூர் மெட்ரோ இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை: மெட்ரோ நிர்வாகம்

news

மகளிர் இலவசப் பஸ்களை விமர்சிக்காதீங்க.. என்னெல்லாம் நடக்குது தெரியுமா.. கேட்டா ஆச்சரியப்படுவீங்க!

news

தீபாவளியன்று குறைந்திருந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு....சவரனுக்கு ரூ.2,080 உயர்வு!

news

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எதிரொலி.. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை!

news

தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்!

news

உழவர்களுக்கு இந்த தீபாவளி இருளாகத்தான் இருந்தது.. கொல்லாமல் கொல்லுகிறது திமுக அரசு:அன்புமணி

news

சித்திரையும் வெயிலும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்