சென்னையில் சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடையணிந்து போராட்டம்

Aug 28, 2025,12:39 PM IST
சென்னை : சென்னை எழிலகத்தில் சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடையணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் சென்னை ரிப்பன் மாளிகை முன்பாக தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து 14 நாட்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக, கோர்ட் உத்தரவுடன் போலீசார் அவர்களை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்நிலையில் இன்று எழிலகம் வாசலில் சத்துணவுப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முறையான சம்பளம் வழங்குதல், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். காலியாக உள்ள 60,000 க்கம் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். குறைந்தபட்சமாக ரூ.6750 ஓய்வூதியம் வேண்டும் என்பவை சத்துணவு ஊழியர்களின் பிரதான கோரிக்கைகளாக உள்ளன. கருப்பு உடையணிந்து ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 



தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஏழு கட்ட போராட்டம் ஆகஸ்ட் 21ம் தேதி துவங்கியது. முதல் கட்டமாக, மாவட்ட தலைநகரங்களில் ஆகஸ்ட் 21ம் தேதியன்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. ராமநாதபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் அதிகமானவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அக்டோபர் 20ம் தேதி திருச்சியில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். 

தொடர்ச்சியாக தற்செயல் விடுப்பு போராட்டம், சென்னையில் பேரணி, மாவட்ட தலைநகரங்களில் வேலைநிறுத்தம், 2026ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தொடர்  வேலை நிறுத்தம் என அடுத்தடுத்த போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் சத்துணவு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்னது பிரியாணி இல்லையா?...தேர்தல் விலைப்பட்டியலில் பிரியாணி 'மிஸ்சிங்': அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

news

பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

news

த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்

news

காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்

news

புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை

news

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்

news

சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

news

கேஸ் சிலிண்டர் பெற இனி biometric கட்டாயம்...மத்திய அரசு அதிரடி

news

திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை

அதிகம் பார்க்கும் செய்திகள்