பாலியல் தொல்லை வழக்கு: திண்டுக்கல் பாஜக முன்னாள் செயலாளர் கைது

Apr 11, 2024,03:03 PM IST
திண்டுக்கல்: பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த திண்டுக்கல் மேற்கு  மாவட்ட பாஜக செயலாளர் மகுடீஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில், காலை உணவு திட்ட சமையலராக பெண் ஊழியர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம் போல அரசு பள்ளியில் உணவு சமைப்பதற்காக வந்து கொண்டிருந்த போது, பாஜக மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் தனது வண்டியில் ஏறுமாறு கூறியிருக்கிறார். சமையல் பொருட்களை கணக்கு பார்க்க வேண்டும் என்று  அழைத்து சென்றார். அப்போது தனியாக இருந்த அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக  பெண் சமையலர் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.



மேலும், அப்பெண் சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் மகுடீஸ்வரன் மீது, 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் ஒன்றிய பார்வையாளர் பதவியில் இருந்தும், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து விடுவிக்கிறேன் என்று  கட்சி மாவட்ட தலைவர் அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில், காலை உணவுத் திட்ட பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்து திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக முன்னாள் செயலாளர் மகுடீஸ்வரன் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

news

அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!

news

Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்

news

ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!

news

Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!

news

அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

அதிகம் பார்க்கும் செய்திகள்