சென்னை: அமெரிக்காவின் வரிவிதிப்பை சமாளிக்க சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு, பாமக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மத்திய அரசு திமுக அரசை விட முன்னோடியான செயல்களை மேற்கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா ஏற்கனவே இருந்த 25 சதவீத வரியுடன், தற்போது மேலும் 25 சதவீத வரியை விதித்துள்ளது. இந்த அதிகப்படியான வரி விதிப்பின் காரணமாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்களில் 70 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. இதனால், தமிழகத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில்,
இந்திய பொருட்களின் மீது அமெரிக்கா 50% இறக்குமதி வரி விதித்துள்ளது. இது தமிழகத்தில் ஏற்றுமதியை பாதித்துள்ளது. குறிப்பாக ஜவுளி மையமான திருப்பூரில் ரூ.3000 கோடி மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கிறது. பல்லாயிரக் கணக்கானோரின் வேலைவாய்ப்பு அபாயத்தில் உள்ளது.

இந்தச் சூழலில் தமிழக தொழில்துறை மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் சலுகைகளை மத்திய அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இதனை, மேற்கோள் காட்டி முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாலை கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, திமுக அரசை விட முன்னோடியான செயல்களை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் வரிவிதிப்பை சமாளிக்க, மத்திய அரசு ஏற்கனவே நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது. இதற்காக நீங்கள் வலியுறுத்தாமல், தமிழகத்தில் நியாயமற்ற வகையில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை முதல்வர் ஸ்டாலின் முதலில் திரும்பப் பெற வேண்டும் என்று பதில் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வாழ்க்கை.. தூங்குறது மூணு மணி .. எழும்புறது ஆறு மணி!
பெயரளவிலான பெயர்கள்!
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}