டெல்லி/சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் செலுத்தும் வகையில், மத்திய அரசு 7 நாள் அரசு முறைத் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதேபோல தமிழ்நாடு அரசும் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதார உயர்வின் சிற்பியாக விளங்கிய மன்மோகன் சிங் நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி இன்றைய இந்தியாவின் வலிவுக்கு வித்திட்டவர். அவரது அரசின் கொள்கைகள் காரணமாக இந்தியாவின் தொழிற்துறை மாபெரும் வளர்ச்சியை கண்டது. இந்தியாவின் ஒரே சீக்கிய பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங்( 92) வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இரவு 9:51 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
மன்மோகன் சிங்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அனைத்து மாநில முதல்வர்கள் என பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உயரிழப்பிற்கு தமிழ்நாடு அரசு ஏழு நாள் தூக்கம் அனுசரிக்கப்பட இருப்பதாக அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உயிரிழப்பிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை துக்கம் அனுசரிக்கப்படும். தமிழ்நாட்டில் ஏழு நாட்கள் அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்.அரசு சார்ந்த நிகழ்ச்சிகள் 7 நாட்கள் நடைபெறாது அதில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசும் துக்கம் அனுசரிப்பு
அதேபோல மத்திய அரசும் 7 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. ராஜ்காட்டில் நாளை நடைபெறவுள்ள மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதைகளுடன் நடைபெறும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதே சமயத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக காங்கிரஸ் சார்பில் அடுத்த ஏழு நாட்களுக்கு அனைத்து கட்சி நிகழ்ச்சிகளையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் 10வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.. வழக்கம் போல மாணவியரே அதிகம் பாஸ்!
பொள்ளாச்சி வழக்கில்.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க.. முதல்வர் உத்தரவு..!
என் குழந்தைகள் என் உயிர்.. என்னிடமிருந்து பிரிக்க முயன்றார்கள்.. நடிகர் ரவி மோகன் பரபரப்பு அறிக்கை
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 52 சதவீதம் குற்றங்கள் அதிகரிப்பு..பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்ய வேண்டாம்...ஆப்பிள் சிஇஓ.,க்கு டிரம்ப் உத்தரவு
cyclone shakthi பெங்களூருக்கு ஆரஞ்சு அலர்ட்...புயல் காற்றுடன் மழை வெளுக்க போகுதாம்
இந்தியாவில் அமலுக்கு வந்தது.. பயோ மெட்ரிக் விவரங்கள் அடங்கிய இ-பாஸ்போர்ட்..!
தொழிற்சாலையில் டேங்க் வெடிப்பு.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்!
சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின்.. kissa47 பாடல் நீக்கம்.. படக்குழு அறிவிப்பு!
{{comments.comment}}