மணிப்பூரில் மீண்டும் வன்முறை, துப்பாக்கிச்சூடு... 2 பேர் பலி

Aug 30, 2023,11:54 AM IST
இம்பால் : மணிப்பூரின் பிஷ்னுபூர் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. அங்கு நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர். 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கொயிரடக் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஜங்மின்லுன் கங்தே என்ற 30 வயது தன்னார்வலர் உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டுள்ளனர். 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதே போல் நரன்செயினா என்ற கிராமத்தில் வயலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சலர் ஜோடின் என்பவர் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். 

நெஞ்சில் குண்டு காயங்களுடன் இருந்த அவர் தற்போது இம்பாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 

மாவட்ட போலீசார், அசாம் ஊர்காவல் படை, ராணுவம், மத்திய பாதுகாப்பு படையினர் தலையிட்ட பிறகு அங்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த துப்பாக்கிச் சூடு எதற்காக நடத்தப்பட்டது என தெரியவில்லை. ஜாதி பிரச்சனை காரணமாக இரு வேறு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. 

மணிப்பூரில் இந்த ஆண்டு மே மாதம் முதல் நடைபெற்று வரும் கலவரத்தில் இதுவரை 140 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

news

சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்