செம்பரம்பாக்கம்.. மணமக்களுக்கு பூண்டு மாலை போட்ட நண்பர்கள்.. இது புதுசா இருக்குண்ணே.. புதுசா இருக்கு

Nov 02, 2024,03:54 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் பூண்டின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் மணமக்களுக்கு, அவரது நண்பர்கள் பூண்டு மாலையை பரிசாக வழங்கி கலகலப்பை ஏற்படுத்தினர்.


நாம் அன்றாடம் சமையல்களில் பயன்படுத்தும் முக்கிய பொருளாகவும், மருந்துவ குணம் கொண்ட பொருளாகவும் பூண்டு உள்ளது. தமிழகத்தின் மிகப் பெரிய பூண்டு சந்தை தேனி மாவட்டத்தில்தான் உள்ளது. ஏனெனில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பூண்டுகள், இந்த சந்தைக்கு கொண்டுவரப்பட்டு இங்குதான் விலை நிர்ணையம் செய்யப்படுகிறது. அதேபோல் பூண்டு உற்பத்தியில் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன. இங்கிருந்தும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பூண்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வியாபாரிகள் மொத்தமாக அல்லது சில்லறை விலையில் விற்பனை செய்கின்றனர். 

இந்த நிலையில் தற்போது  வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பூண்டு வரத்து குறைந்துள்ளது. இதனால் நாளுக்கு நாள் பூண்டின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.   வழக்கமாக ரகத்திற்கு ஏற்ப ஒரு கிலோ பூண்டு ரூபாய் 120 முதல் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது விலை அதிகரித்து ஒரு கிலோ பூண்டின் விலை ரூபாய் 400 வரை விற்பனை செய்யப்படுகிறது. 




இந்த நிலையில் சென்னை பூவிருந்தவல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வின்சென்ட் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உறவினர்கள் நண்பர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். அப்போது பூண்டின் விலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தங்கதம்திற்கு நிகராக அதை கருதி மணமக்களுக்கு நண்பர்கள் சிலர் பூண்டு மாலையை பரிசாக வழங்கினர்.


பூண்டு மாலை போட்டதால் திருமண விழாவிலும் கலகலப்பு கூடியது. இப்படித்தான் முன்பு வெங்காய விலை விண்ணைத் தொட்டபோது வெங்காய மாலை போட்டனர். அதேபோல தக்காளி மாலையும் போடப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது. இப்போது பூண்டுக்கு யோகம் அடித்துள்ளது..!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்