ஜி20 மாநாடு.. டெல்லி ரெடி.. தலைவர்கள் குவிகிறார்கள்.. பாதுகாப்பு ஹை அலர்ட்!

Sep 08, 2023,09:33 AM IST
டெல்லி: பலத்த பாதுகாப்புக் கோட்டையாக மாற்றப்பட்டுள்ள டெல்லியில் ஜி20 மாநாடு நாளை தொடங்குகிறது. இதையொட்டி உலக நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் வந்து குவிய ஆரம்பித்துள்ளனர்.

வளர்ச்சி அடைந்த 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி20 அமைப்பின் தலைவராக இந்தியா உள்ளது. இதையடுத்து நாளை இந்தியா தலைமையில் டெல்லியில் ஜி20 அமைப்பின் மாநாடு நடைபெறவுள்ளது. 2 நாட்களுக்கு இந்த மாநாடு நடைபெறும்.



இதையொட்டி தலைநகர் டெல்லியில் மிகப் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று காலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 12 மணி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

ஆம்புலன்ஸ்கள், மருந்து வாகனங்கள், அத்தியாவசியச் சேவைப் பிரிவினரின் வாகனங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்கள், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அவர்கள் இருக்கும் பகுதிக்குள் மட்டுமே செலுத்த அனுமதிக்கப்படும். இந்தியா கேட், கர்தவ்யா பாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாக்கிங், சைக்கிளிங், பிக்னிக் செல்வது ஆகியவற்றைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட  ஒரு லட்சம் போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் டெல்லி முழுவதும் பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தெருத் தெருவாக கண்காணிப்பும் மேற்கொள்ளப்படவுள்ளது.  போர் விமானங்களும் கூட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஜாமர் கருவிகள், மோப்ப நாய்கள், ஏஐ அடிப்படையிலான கேமராக்கள் சகிதம் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று டெல்லி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று அவர் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்

news

காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு

news

ஆடியில் ஆடி வரும் மெல்லிடையாள்.. தேன் தமிழ் மொழியாள் !

news

​மௌனத்தின் அளவுகோல்

news

2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 3 நாடுகளின் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்

news

ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!

news

மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

news

மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!

news

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை : சட்ட மசோதா நிறைவேறியது

அதிகம் பார்க்கும் செய்திகள்