ஜி20 மாநாடு.. டெல்லி ரெடி.. தலைவர்கள் குவிகிறார்கள்.. பாதுகாப்பு ஹை அலர்ட்!

Sep 08, 2023,09:33 AM IST
டெல்லி: பலத்த பாதுகாப்புக் கோட்டையாக மாற்றப்பட்டுள்ள டெல்லியில் ஜி20 மாநாடு நாளை தொடங்குகிறது. இதையொட்டி உலக நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் வந்து குவிய ஆரம்பித்துள்ளனர்.

வளர்ச்சி அடைந்த 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி20 அமைப்பின் தலைவராக இந்தியா உள்ளது. இதையடுத்து நாளை இந்தியா தலைமையில் டெல்லியில் ஜி20 அமைப்பின் மாநாடு நடைபெறவுள்ளது. 2 நாட்களுக்கு இந்த மாநாடு நடைபெறும்.



இதையொட்டி தலைநகர் டெல்லியில் மிகப் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று காலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 12 மணி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

ஆம்புலன்ஸ்கள், மருந்து வாகனங்கள், அத்தியாவசியச் சேவைப் பிரிவினரின் வாகனங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்கள், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அவர்கள் இருக்கும் பகுதிக்குள் மட்டுமே செலுத்த அனுமதிக்கப்படும். இந்தியா கேட், கர்தவ்யா பாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாக்கிங், சைக்கிளிங், பிக்னிக் செல்வது ஆகியவற்றைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட  ஒரு லட்சம் போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் டெல்லி முழுவதும் பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தெருத் தெருவாக கண்காணிப்பும் மேற்கொள்ளப்படவுள்ளது.  போர் விமானங்களும் கூட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஜாமர் கருவிகள், மோப்ப நாய்கள், ஏஐ அடிப்படையிலான கேமராக்கள் சகிதம் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று டெல்லி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று அவர் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

tn result 2026 தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக

news

Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. விளக்கேற்றிய விரல்கள்!

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்

news

மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!

news

May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'

news

உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!

news

ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!

news

RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்

அதிகம் பார்க்கும் செய்திகள்