ஜி20 மாநாடு.. டெல்லி ரெடி.. தலைவர்கள் குவிகிறார்கள்.. பாதுகாப்பு ஹை அலர்ட்!

Sep 08, 2023,09:33 AM IST
டெல்லி: பலத்த பாதுகாப்புக் கோட்டையாக மாற்றப்பட்டுள்ள டெல்லியில் ஜி20 மாநாடு நாளை தொடங்குகிறது. இதையொட்டி உலக நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் வந்து குவிய ஆரம்பித்துள்ளனர்.

வளர்ச்சி அடைந்த 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி20 அமைப்பின் தலைவராக இந்தியா உள்ளது. இதையடுத்து நாளை இந்தியா தலைமையில் டெல்லியில் ஜி20 அமைப்பின் மாநாடு நடைபெறவுள்ளது. 2 நாட்களுக்கு இந்த மாநாடு நடைபெறும்.



இதையொட்டி தலைநகர் டெல்லியில் மிகப் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று காலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 12 மணி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

ஆம்புலன்ஸ்கள், மருந்து வாகனங்கள், அத்தியாவசியச் சேவைப் பிரிவினரின் வாகனங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்கள், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அவர்கள் இருக்கும் பகுதிக்குள் மட்டுமே செலுத்த அனுமதிக்கப்படும். இந்தியா கேட், கர்தவ்யா பாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாக்கிங், சைக்கிளிங், பிக்னிக் செல்வது ஆகியவற்றைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட  ஒரு லட்சம் போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் டெல்லி முழுவதும் பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தெருத் தெருவாக கண்காணிப்பும் மேற்கொள்ளப்படவுள்ளது.  போர் விமானங்களும் கூட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஜாமர் கருவிகள், மோப்ப நாய்கள், ஏஐ அடிப்படையிலான கேமராக்கள் சகிதம் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று டெல்லி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று அவர் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

அதிகம் பார்க்கும் செய்திகள்