90 ஸ் கிட்ஸ் மாதிரி ஆடுனா இப்படித்தான் ஆகும்.. ரோஹித்தை வறுத்தெடுத்த கெளதம் கம்பீர்!

Nov 22, 2023,05:09 PM IST

டெல்லி: 90களில் ஆடும் கிரிக்கெட் போல ஆடினால் எப்படி .. இப்படித்தான் இறுதிப் போட்டிக்கான வியூகம் வகுப்பதா என்று இந்திய கிரிக்கெட் அணியை வறுத்தெடுத்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பியுமான கெளதம் கம்பீர்.


குறிப்பாக கே.எல். ராகுலின் பேட்டிங்கை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். 3வது உலகக் கோப்பைக் கனவை பறி கொடுத்து விட்டு நிற்கிறது இந்தியா. லீக் போட்டிகளில் அசத்தியது.. அரை இறுதிப் போட்டியில் மிரட்டியது.. எனவே இறுதிப் போட்டியிலும் வெற்றி உறுதி, கப் வெல்வது உறுதி என்று பலரும் ஆசையுடன் காத்திருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட கப் நம்தே என்று உற்சாகமாக சொல்லியிருந்தா். ஆனால் எல்லாமே மண்ணாகி விட்டது.


அதீதமாக ஆசைப்பட்டு காத்திருந்த ரசிகர்கள்தான் பாவம் ரொம்ப ஏமாந்து போய் விட்டனர். இந்த நிலையில் இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடிய விதம் குறித்து முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது.




இறுதிப் போட்டி என்பது இரு பக்கமும் கூர்மையாக உள்ள கத்தி போன்றது. நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன். மிகவும் வீரத்துடன் போராடும் அணியே கோப்பையை வெல்லும் என்று. இப்போது அது புரிந்திருக்கும். 11 முதல் 40 ஓவர்களுக்குள் நல்லதொரு பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்த வேண்டியது மிக மிக அவசியம். அதுதான் அணிக்கு வலுவான நிலையை ஏற்படுத்தும். அந்த ரிஸ்க்கை யாராவது எடுத்திருக்க வேண்டும்.


சொல்லப் போனால் இந்தியா இன்னும் குறைவான ஸ்கோரில் அவுட்டாகியிருக்க கூடும். அந்த அபாயமும் இருந்தது. இந்திய அணியின் 6 முதல் 7 டாப் பேட்ஸ்மேன்கள் இன்னும் சிறப்பாக ஆடியிருக்க வேண்டும். அவர்களிடம் அக்ரசிவ்வான மனப்பான்மை இல்லை. 240 ரன்களை டிபன்ட் செய்ய முடியும் என்று நினைத்தால், அது சரியான பார்வை அல்ல. அங்குதான் இந்தியா தவறி விட்டது. போட்டிக்கு முன்பாகவே நாம் அக்ரச்சிவாக இருக்க வேண்டும் என்று ரோஹித் சர்மா வீரர்களுக்கு சொல்லியிருக்க வேண்டும்.


விராட் கோலி, இன்னிங்ஸை  நிலை நிறுத்தும் பொறுப்பை சரியாக செய்தார். இந்தப் போட்டி மட்டுமல்ல, இந்தத் தொடர் முழுவதுமே அதை அவர் சரியாகவே செய்தார். எனவே மற்ற பேட்ஸ்மேன்கள் ரிஸ்க் எடுத்திருக்க வேண்டும். குறிப்பாக கே.எல். ராகுல் 107 பந்துகளைச் சந்தித்து 66 ரன்கள் எடுத்தது ஏற்றுக் கொள்ள முடியாதது. இப்படித்தான் விளையாடுவதா.. இது 90களில் ஆடும் கிரிக்கெட்.


ஒன்று அடித்து ஆடி 150 ரன்களில் அவுட் ஆகியிருக்கலாம்.. இல்லையா நிலைத்து ஆடி 300 ரன்களை தாண்டியிருக்க வேண்டும். இரண்டும் கெட்டானாக ஆடியிருக்கிறார்கள். 240 என்பது போதுமான ஸ்கோரே கிடையாது. 300 ரன்களுக்கு மேல் போயிருக்க வேண்டும். அதை எடுக்கும் தைரியம் இந்தியாவிடம் இல்லாமல் போய் விட்டது என்றார் கம்பீர்.


2011ம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்ல கெளதம் கம்பீர் அதிரடியாக விளாசிய 97 ரன்கள்தான் காரணம் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

news

நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

news

பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்