பாகிஸ்தானுக்கான இந்தியத் துணைத் தூதராகிறார் கீதிகா ஸ்ரீவத்சவா

Aug 29, 2023,11:14 AM IST
டெல்லி: மத்திய வெளியுறவுத்துறை இணை செயலாளராக உள்ள கீதிகா ஸ்ரீவத்சவா, பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூரதகத்தில் துணைத் தூரகா பொறுப்பேற்கவுள்ளார்.

டெல்லியில் தற்போது வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இணைச் செயலளராக பணியாற்றி வருகிறார் கீதிகா ஸ்ரீவத்சவா. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில்  துணைத் தூதராக மத்திய அரசு அவரை நியமித்துள்ளது.



தற்போது அந்தப் பொறுப்பில் சுரேஷ் குமார் இருந்து வருகிறார். அவர் டெல்லிக்கு திரும்புகிறார். 

2005ம் ஆண்டு ஐஎப்எஸ் அதிகாரியான கீதிகா ஸ்ரீவத்சவா, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் இந்தோ பசிபிக் பிரிவில் இணைச் செயலாளராக தற்போது உள்ளார்.  

இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களது தூதரகங்களில் தூதர் அந்தஸ்தில் அதிகாரிகளை நியமிக்கவில்லை. அவர்களது பதவிகளை துணைத் தூதர் என்ற அளவுக்கு குறைத்துள்ளன. கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு கொடுக்கப்பட்டிருந்த  சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் அந்தஸ்தை ஹை கமிஷன் அந்தஸ்துக்கு குறைத்தது பாகிஸ்தான். இதையடுத்து இந்தியாவும் அதே போல செய்தது என்பது நினைவிருக்கலாம்.

கீதிகா ஸ்ரீவத்சவா விரைவில் பாகிஸ்தான் சென்று தனது பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!

news

திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்

news

ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!

news

சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)

news

ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)

news

கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க

news

வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!

news

தாயன்பு !

news

All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்