பாகிஸ்தானுக்கான இந்தியத் துணைத் தூதராகிறார் கீதிகா ஸ்ரீவத்சவா

Aug 29, 2023,11:14 AM IST
டெல்லி: மத்திய வெளியுறவுத்துறை இணை செயலாளராக உள்ள கீதிகா ஸ்ரீவத்சவா, பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூரதகத்தில் துணைத் தூரகா பொறுப்பேற்கவுள்ளார்.

டெல்லியில் தற்போது வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இணைச் செயலளராக பணியாற்றி வருகிறார் கீதிகா ஸ்ரீவத்சவா. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில்  துணைத் தூதராக மத்திய அரசு அவரை நியமித்துள்ளது.



தற்போது அந்தப் பொறுப்பில் சுரேஷ் குமார் இருந்து வருகிறார். அவர் டெல்லிக்கு திரும்புகிறார். 

2005ம் ஆண்டு ஐஎப்எஸ் அதிகாரியான கீதிகா ஸ்ரீவத்சவா, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் இந்தோ பசிபிக் பிரிவில் இணைச் செயலாளராக தற்போது உள்ளார்.  

இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களது தூதரகங்களில் தூதர் அந்தஸ்தில் அதிகாரிகளை நியமிக்கவில்லை. அவர்களது பதவிகளை துணைத் தூதர் என்ற அளவுக்கு குறைத்துள்ளன. கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு கொடுக்கப்பட்டிருந்த  சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் அந்தஸ்தை ஹை கமிஷன் அந்தஸ்துக்கு குறைத்தது பாகிஸ்தான். இதையடுத்து இந்தியாவும் அதே போல செய்தது என்பது நினைவிருக்கலாம்.

கீதிகா ஸ்ரீவத்சவா விரைவில் பாகிஸ்தான் சென்று தனது பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

புதுச்சேரி, அசாம், கேரளா சட்டசபை தேர்தல் 2026: இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது

news

சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை

news

தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை

news

இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?

news

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்

news

Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!

news

கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?

news

சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!

news

Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்