பாகிஸ்தானுக்கான இந்தியத் துணைத் தூதராகிறார் கீதிகா ஸ்ரீவத்சவா

Aug 29, 2023,11:14 AM IST
டெல்லி: மத்திய வெளியுறவுத்துறை இணை செயலாளராக உள்ள கீதிகா ஸ்ரீவத்சவா, பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூரதகத்தில் துணைத் தூரகா பொறுப்பேற்கவுள்ளார்.

டெல்லியில் தற்போது வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இணைச் செயலளராக பணியாற்றி வருகிறார் கீதிகா ஸ்ரீவத்சவா. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில்  துணைத் தூதராக மத்திய அரசு அவரை நியமித்துள்ளது.



தற்போது அந்தப் பொறுப்பில் சுரேஷ் குமார் இருந்து வருகிறார். அவர் டெல்லிக்கு திரும்புகிறார். 

2005ம் ஆண்டு ஐஎப்எஸ் அதிகாரியான கீதிகா ஸ்ரீவத்சவா, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் இந்தோ பசிபிக் பிரிவில் இணைச் செயலாளராக தற்போது உள்ளார்.  

இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களது தூதரகங்களில் தூதர் அந்தஸ்தில் அதிகாரிகளை நியமிக்கவில்லை. அவர்களது பதவிகளை துணைத் தூதர் என்ற அளவுக்கு குறைத்துள்ளன. கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு கொடுக்கப்பட்டிருந்த  சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் அந்தஸ்தை ஹை கமிஷன் அந்தஸ்துக்கு குறைத்தது பாகிஸ்தான். இதையடுத்து இந்தியாவும் அதே போல செய்தது என்பது நினைவிருக்கலாம்.

கீதிகா ஸ்ரீவத்சவா விரைவில் பாகிஸ்தான் சென்று தனது பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா.. மறக்க முடியாத செளகார் ஜானகி.. பின்னி எடுத்த வேடங்கள்..!

news

"திமுக எம்எல்ஏ.,க்களுக்கு கார் வேண்டாம்!" – சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

news

ஃபைலை திறக்க ஜோசியக்காரர் சொல்லணுமா? உதயநிதி காரசார பேச்சு

news

எம்எல்ஏ.,க்களுக்கு கார் கொடுப்பது ஏன்? அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்

news

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

news

ஏ டி எம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? நேரில் செயல் விளக்கம் பெற்ற மாணவர்கள்!

news

டெல்லியில் டிஜிபி அலுவலகம் முன்பு ராகுல் காந்தி திடீர் தர்ணா போராட்டம்

news

Varalakshmi Nonbu: வரலட்சுமி பூஜை ஏன் செய்யப்படுகிறது?

news

சிந்தனைச் சிதறல்: எந்த ஒன்றையும் உதாசீனப்படுத்தி விடாதீர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்