கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!

Apr 01, 2025,06:24 PM IST

சென்னை: கும்பகோணம் வெற்றிலைக்கும், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.


ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகக் கூடிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இந்த குறியீடு பெறப்படுவதன் மூலம் அந்த பொருட்களுக்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்கிறது. இது அந்த பகுதியில் உள்ள அனைவருக்குமான உரிமையாக பார்க்கப்படுகிறது. பாரம்பரிய முறைகளின் படி இந்த பொருட்களானது தயாரிக்கப் படுகிறது என்பதற்கான சான்றிதழாக இந்த புவிசார் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் தோற்றம் கொண்ட தயாரிப்புகளில் வைக்கப்படும் ஒரு முத்திரை ஆகும்.


இந்த குறியீட்டினை எளிதில் பெற்றுவிட முடியாது. அந்த பொருட்களின் தனித்தன்மை, தயாரிக்கும் முறை, விளைவிக்கப்படும் செயல் முறை உள்ளிட்ட பல்வேறு விதமாக தகவல்கள் சேகரித்து மத்திய அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும். மத்திய அரசும் அதனை ஆராய்ந்து அதற்கான தனித்தன்மையை கண்டுபிடித்த பின்னர் தான் அதற்கான குறியீட்டை வழங்கி வருகின்றது. இந்தியாவைப் பொறுத்தவரை, அதன் புவிசார் குறியீட்டின் அடையாள முத்திரையுடன் கூடிய தயாரிப்புகளானது நம்ப முடியாத வகையில் இந்தியாவின் விலை மதிப்பற்ற அரும்பொருட் களஞ்சியமாகக் கருதப்படுகின்றன. 




பொதுவாக விவசாயப் பொருட்கள், உணவுப் பொருட்கள், மது மற்றும் மது பானங்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் தொழில்துறைத் தயாரிப்புகளுக்கு புவிசார் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட பயனர்களாகப் பதிவு செய்தவர்களைத் தவிர வேறு யாரும் இதன் பிரபலமான தயாரிப்புப் பெயரைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை என்பதை குறியீடானது உறுதி செய்கிறது.


பல்வேறு சிறப்புகளுடன் கிடைக்கும் இந்த குறியீடு கும்பகோணம் வெற்றிலைக்கும், கன்னியாகுமரி தோவாளை மாணிக்க மாலைக்கும்  கிடைத்துள்ளது. இரு பொருட்களுக்கும் புவிசார் குறியீடு பெறப்பட்டிருப்பதாக வழக்கறிஞர் சஞ்சய் காந்தி அறிவித்துள்ளார். முதன் முறையாக விவசாய பொருளான கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாட்டை பொருத்தவரை இதுவரைக்கும் 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. மேலும், வந்தவாசி கோரைப்பாய், ஜவ்வாது புளி, கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல சில உள்ளங்களை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

ஜூன் 21, 22 சென்னை எழும்பூர் டூ திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

news

22ம் தேதி முருகனை கையில் எடுப்பது போல் 2026ல் தமிழகத்தை கையில் எடுப்போம்: நயினார் நாகேந்திரன்

news

சுப்ரீம் கோர்ட்டே சொல்லிடுச்சு... தமிழ்த் திரையுலகுக்கு புதுத் தெம்பு.. கமல்ஹாசனின் ரியல் Thuglife

news

கமல்ஹாசனை எப்படி மன்னிப்பு கேட்கச் சொல்லலாம்.. தக்லைபுக்கு தடை இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி

news

காவிரி நதிநீர் பற்றி பேச பொம்மை முதல்வருக்கு துளியும் அருகதை இல்லை: எடப்பாடி பழனிச்சாமி!

news

வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.840 குறைவு!

news

சிறுவன் கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்டுள்ள ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட்

news

4 ராசிகளில் நீங்களும் ஒருவரா?..2025ல் பெரிய கோடீஸ்வரரா ஆய்ருவீங்களாம்ய்யா..பாபா வங்காவே சொல்லிட்டாரு

அதிகம் பார்க்கும் செய்திகள்