அடஈ ஸியா இருக்கே..  ஜெர்மன் அமைச்சரை ஆச்சரியப்பட வைத்த இந்தியாவின் யூபிஐ!

Aug 21, 2023,04:52 PM IST
பெங்களூரு : இந்தியா வந்துள்ள ஜெர்மன் டிஜிட்டல் துறை அமைச்சர், இங்கு யூபிஐ மூலம் பணபரித்தனை முறை சாலையோர வியாபாரிகளாலும் கடைபிடிக்கப்பட்டு வருவதை கண்டு ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரன்சி பயன்பாடு குறைந்து, டிஜிட்டல் பண பரிவர்த்தனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையோர சிறு வியாபாரி முதல் பெரிய பிராண்டட் ஷோரூம்களிலும் கூட டிஜிட்டல் முறையிலேயே பண பரிவர்த்தனை நடக்க துவங்கி உள்ளது. இதனால் வியாபாரிகள் தாங்கள் பாடுபட்டு சம்பாதித்த பணத்தை யாராவது திருடி சென்று விடுவார்களோ என்ற பயம் இல்லாமல், தாங்கள் விற்பனை செய்த பொருளுக்கான பணம் நேரடியாக தங்களின் வங்கி கணக்கிற்கே சென்று விடுவதால் நிம்மதியாக இருந்து வருகிறார்கள்.



இந்தியாவின் இந்த யூபிஐ பண பரிவர்த்தனை மற்ற நாடுகளையும் ஆச்சரியப்பட வைப்பதுடன், மிகவும் கவர்ந்துள்ளது. டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் இந்தியா பெற்றுள்ள வெற்றியை கண்டு மற்ற உலக நாடுகள் பலவற்றிலும் இந்த முறையை கொண்டு வருவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் ஜெர்மன் நாட்டின் டிஜிட்டல் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் வோல்கர் விஸ்ஸிங், பெங்களூருவில் சாலையோர காய்கறி வியாபாரி ஒருவரிடம் பொருள் வாங்கி விட்டு, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி உள்ளார். இந்திய தூதர் அவருக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறையை கற்றுக் கொடுத்துள்ளார். மிக வேகமாக, அதே சமயம் பாதுகாப்பான முறையில் பணம் செலுத்தப்பட்டதை கண்டு விஸ்ஸிங் ஆச்சரியப்பட்டுள்ளார்.

ஜெர்மன் அமைச்சரின் இந்த அனுபவத்தை இந்திய தூதரர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்ட் செம வைரலாகி உள்ளது. இதற்கு உடனடியாக ரியாக்ட் செய்த நெட்டிசன்கள், இந்தியாவின் மிகப் பெரிய சாதனைகளில் இதுவும் ஒன்று. இந்தியர் என்பதில் பெருமை கொள்கிறோம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்