சென்னை: விஜய் நடிப்பில் உருவான கோட் திரைப்படம் உலகம் முழுவதும் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக தயாராக உள்ள நிலையில், இப்படம் வெளியாகும் முன்பே டிக்கெட் புக்கிங்கில் வெளிநாடுகளில் சாதனை படைத்து வருகிறது .
ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக தயாராக உள்ளது. இப்படத்தின் ஓப்பனிங் ஷோவுக்கான ரசிகர்கள் ஆவலுடன் டிக்கெட்டை புக் செய்து வருகின்றனர். மேலும் படத்தின் அப்டேட்டுகளை அவ்வப்போது வெளியிடும் படக் குழுவினரால் படத்தின் எதிர்பார்ப்பும் எகிற வைத்து வருகிறது.

அமெரிக்காவின் முன்னணி பட வெளியீட்டு நிறுவனம் ஹம்சினி பிரைவேட் லிமிடெட் நிறுவனம். இந்நிறுவனம் தென்னிந்திய மொழிகளின் முன்னணி ஹீரோக்கள் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தையும் வெளியிட்டு வருகிறது. குறிப்பாக இந்த நிறுவனம் அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகம் எங்கும் வெளியிட்டு வருகிறது. அதன்படி மாஸ்டர்,பீஸ்ட் என தளபதி நடித்த பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.
அதேபோல் லியோ படம் ஐரோப்பாவில் வெளியிடப்பட்டது. இப்படங்கள் அனைத்தும் உலக நாடுகளில் பெரும் வரவேற்பையும் ஆதரவையும் பெற்றுள்ளது. இதுவரை ஹம்சி என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 140 படங்களை வெளியிட்டு சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் விஜய் தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் நடித்து அசத்தியிருக்கும் கோட் படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக தயாராக உள்ள நிலையில் வெளியீட்டிற்கு முன்னதாகவே வட அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் ஹம்சினி என்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியிட உள்ளது.
இதுவரை இல்லாத அளவிற்கு கோட் படம் அமெரிக்காவில் 650 இடங்களில் 1700 திரையரங்குகளில் வெளியிடுகிறது. தற்போது அட்வான்ஸ் புக்கிங் ஓபன் ஆன நிலையில் ரசிகர்கள் நான் நீ என முந்தி எடுத்துக்கொண்டு புக்கிங் செய்து வரும் வருகின்றனர். இதனால் உலக அளவில் தென் இந்திய திரைப்பட சாதனைகளை முறியடித்து வருகிறது கோட் திரைப்படம். இன்னும் பல சாதனைகளை கோட் திரைப்படம் முறியடிக்குமா? என எதிர்பார்த்து எழுந்துள்ளது.
அதே சமயம் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள தேவாரா படத்தையும் ஓவர்சீஸ் வெளியிடுகிறது. இப்படத்திற்கும் அட்வான்ஸ் புக்கிங் துவங்கி சாதனை படைத்து வருகிறதாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?
தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு
சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்
திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!
கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்
70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?
நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!
{{comments.comment}}