- காந்திமதி நாதன்
தூத்துக்குடி: உலக அமைதி வேண்டி தூத்துக்குடியில் சிறுமியை அலங்கரித்து, காவேரி அம்மன் வழிபாடு நடைபெற்றது.
தூத்துக்குடியில் ஒவ்வொரு ஆண்டும் காவேரி நதியை போற்றும் வகையில் காவேரி அம்மன் வழிபாடு நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நடபெற்று வரும் இந்த விழா, இந்தாண்டிற்கான ஐப்பசி மாதம் முதல் தேதி தொடங்கப்பட்டது. காவேரி மண், நீர் எடுத்து, கும்பத்தில் வைத்து வழிபாடு தொடங்கியது. இந்த வழிபாட்டில் மழை வளம், நோயற்ற வாழ்வு, உலக அமைதியை முன் வைத்து வழிபாடு துவங்குகின்றனர்.
காவேரி அம்மன் வழிபாடு அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத சங்கர ராமேஸ்வர் ஆலயத்தில் அருள் புரிந்து வரும் கன்னி விநாயகர் ஆலயத்தில் 60ஆண்டுகளுக்கும் மேலாக சிவ. ஆதி குடும்பத்தினர் காவேரி அன்னையை போற்றும் விதமாக

ஐப்பசி முழுவதும் சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்து வருகின்றனர். விழாவின் நிறைவு நாளான ஐப்பசி மாத கடைசி நாள் அம்பாளின் திருகல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. அத்துடன், கும்பங்கள் அலங்கரிக்கப்பட்டு, 10 வயதுள்ள சிறுமியை அம்மனாக பாவித்து, அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடும் நடத்தப்பட்டது. அதன்பின்னர் மாவிளக்கு, சர்க்கரை பொங்கல், வளையல், மஞ்சள் கயிறு பிரசாதமாக பெண்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த விழா குறித்து கோமதியம்மாள் பேசுகையில், கடந்த 50 ஆண்டுகளாக காவேரி அம்மன் வழிபாடு நடத்துகிறோம். முதலில் 11 பேருடன் வழிபாடு துவங்கினோம். அம்மன் அருளால், இன்று ஒரு விழாவாக நடக்கிறது. அம்மனாக அலங்கரிக்கப்பட்ட சிறுமியை, பல பகுதிகளிலிருந்து வந்த பெண்கள் மற்றும் ஆண்கள் வழிபட்டு செல்கின்றனர். கலசத்தில் வைத்து வழிபட்ட மண் திருச்செந்தூர் கடலில் கரைக்கப்படும். வழிபட்ட மண் சமுத்திர ராஜாவுடன் சேர்ந்து மழை கொடுக்கும் என்று தெரிவித்தார்.
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
{{comments.comment}}