ஏறிக் கொண்ட போகும் தங்கம் விலை.. காரணம் என்ன.. இதுக்கு என்ட் கார்டே கிடையாதா?

Jan 02, 2026,07:27 PM IST

சென்னை: ஒரு காலத்தில், அதாவது நமது பாட்டிகள் காலத்தில் தங்கம் விலை இருந்த இருப்புக்கும், இப்போது உள்ள தங்கம் விலைக்கும் சற்றும் சம்பந்தமே இல்லை. அப்போதைய விலையைக் கேட்டால் நமக்கெல்லாம் பேராச்சர்யம்தான் மிஞ்சி நிற்கும், பெருமூச்சும் கூடவே வரும். 


இன்று தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது. குறையும் வாய்ப்பே இல்லாமல்தான் இருக்கிறது. அப்படியே குறைந்தால் சொற்ப அளவில்தான் குறைகிறது. ஆனால் ஏறுவது மட்டும் வேகமாக இருக்கிறது.


தங்கம் விலை உயர்ந்து கொண்டே போகக் காரணங்கள் பல இருக்கின்றன. முக்கியமானவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்:




1. தங்கம் குறைவான வளம் -பூமியில் தங்கம் வரையறுக்கப்பட்ட அளவில்தான் உள்ளது. புதிய தங்கச் சுரங்கங்கள் குறைவதால் விலை இயல்பாக உயர்கிறது.


2. பணத்தின் மதிப்பு குறைதல் (பணவீக்கம்) - பணவீக்கம் அதிகரிக்கும்போது காகிதப் பணத்தின் அதாவது கரன்சியின் மதிப்பு குறையும். அப்போது மக்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகத் தேர்வுசெய்வார்கள்.


3. பாதுகாப்பான முதலீடு (Safe Haven) - போர், அரசியல் குழப்பம், பொருளாதார நெருக்கடி போன்ற காலங்களில் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வார்கள். உலக நாடுகளின் ஸ்திரத்தன்மையைப் பொறுத்தும் விலை அமையும்.


4. மக்களின் கலாச்சார நம்பிக்கை - இந்தியா போன்ற நாடுகளில் திருமணம், பண்டிகை, சேமிப்பு ஆகியவற்றில் தங்கம் முக்கிய இடம் பெற்றுள்ளது. தேவை அதிகரித்தால் விலையும் உயரும். இங்கு தங்கம் என்பது புனிதமாகவும், மங்கலகரமானதாகவும் பார்க்கப்படுவதால் தங்கத்திற்கு எப்போதும் இங்கு கிராக்கி உண்டு.


5. மத்திய வங்கிகளின் வாங்கும் திறன் - பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தைச் சேமித்து வருகின்றன. அதனால் சந்தையில் கிடைக்கும் தங்கம் குறைந்து விலை உயரும்.


6. அமெரிக்க டாலர் மதிப்பு - டாலர் மதிப்பு குறையும் போது தங்கம் விலை உலகளவில் உயர்வடையும். டாலர் மதிப்பை வைத்தே தங்கத்தின் விலையும் நிர்ணயமாவது இன்னொரு சிக்கலாகவும் இருக்கிறது.


7. முதலீட்டு சந்தை மாற்றங்கள் - பங்குச் சந்தை சரிவில் இருக்கும் போது முதலீட்டாளர்கள் தங்கம் நோக்கி திரும்புவர். சுருக்கமாகச் சொன்னால்: தங்கம் அழியாதது, குறையாதது, நம்பிக்கைக்குரியது அதனால் காலம் செல்ல செல்ல அதன் விலையும் உயர்ந்து கொண்டே போகிறது. 


என்னங்க படிச்சு டென்ஷனாயிருச்சா.. சரி விடுங்க ஹேப்பியா ஒரு தங்கக் கவிதை படிச்சுட்டு ரிலாக்ஸ் ஆகுங்க..


மதிப்பு அளவிடப்பட்டால் 

தங்கம் பெரிது போலத் தோன்றலாம்.

ஆனால் அர்த்தம் அளவிடப்பட்டால் 

மனிதம் தான் பெரிது.

தங்கம் செல்வம் தரும்,

மனிதம் வாழ்க்கை தரும்.

தங்கம் கையிலிருந்தால் மதிப்பு,

மனிதம் இதயத்தில் இருந்தால் மரியாதை.

தங்கம் இழந்தால் மீண்டும் சேர்க்கலாம்,

மனிதம் இழந்தால் மனிதனே இழந்து போகிறான்.

அதனால்

உலகை ஆளுவது தங்கம் அல்ல 

ஆளுவது தங்கம் ஒளிரும்  வெளிச்சத்தில்,

மனிதம் ஒளிரும்  இருளிலும்.

தங்கம் வாங்க முடியும் எல்லாவற்றையும்,

மனிதம் வாங்க முடியாத அனைத்தையும் காக்கும்.

தங்கம் செல்வத்தின் சின்னம்,

மனிதம் செழுமையான வாழ்வின் அடையாளம்.

தங்கம் பூட்டுப் பெட்டியில் உறங்கும்,

மனிதம் துயரத்தில் விழித்திருக்கும்.

தங்கம் வாரிசாகக் கடத்தப்படும்,

மனிதம் தலைமுறைகளாக வாழ்ந்து போகும்.

தங்கம் இருந்தால் மனிதன் பெரியவன் அல்ல,

மனிதம் இருந்தால் மனிதன் தங்கமே..!


(கட்டுரையாளர் தி. மீரா, ஈரோடு)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!

news

உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?

news

Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி

news

சந்தோஷம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்