சென்னை: கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்றும் இன்றும் குறைந்துள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ள நிலையில், இன்று மட்டும் சவரனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது. 200 அல்ல 300 அல்ல சவரனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது.
இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை கடந்த பல நாட்களாகவே உயர்ந்து வந்தது. உயர்வு என்றால் சாதாரண உயர்வு அல்ல வரலாற்றின் உச்சத்திற்கே சென்று விட்டது.
இந்த விலை ஏற்றம் சாதாரண மக்களை கதி கலங்க வைத்து என்றே செல்லலாம். இந்நிலையில தங்கம் விலை குறைவு என்பது சாதாரண மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை மகிழ்ச்சி மழையில் நனைத்துள்ளது. தங்கம் மட்டும் இல்லை மக்களே வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை...

இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,700 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 145 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.1160 ஆக குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53600 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,310 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,480 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,256 குறைந்துள்ளது.
சென்னையில் வெள்ளி விலை...
இன்றைய வெள்ளியின் விலை குறைந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை ரூ.2.50 பைசா குறைந்து 86.50 ரூபாயாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 692 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,500 குறைந்து ரூ.86,500 க்கு விற்கப்படுகிறது.
படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?
திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி
பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் பிப்., 13ம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என்றும் என் மனைவி சீதா தான்....நான் பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை: பார்த்திபன்
சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ்
பாகிஸ்தானின் பல்டி அரசியல்.. ஐசிசி-யின் அதிரடி கடிதத்தால் அடிபணிந்த பிசிபி!
தேர்வுகளை நடத்த தெரியாதவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு: எடப்பாடி பழனிச்சாமி
{{comments.comment}}