சென்னை: சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு பரவலாக இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
வானிலை மையத்தின் அறிவிப்பின்படி கேடிசிசி பெல்ட் எனப்படும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்யும். இவை தவிர திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கும் அளவுக்கு மழை இருக்கும். போக்குவரத்து பாதிக்கப்படும் அளவுக்கு சில இடங்களில் மழை இருக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பரவலாக ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை விட்டு விட்டு வெளுத்துக் கொண்டுள்ளது. சென்னையில் சில நாட்களாகவே வானம் மூடிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் பெரிதாக மழை இல்லை. இந்த நிலையில் இன்று மாலை சூப்பரான மழையை மக்கள் காண நேர்ந்தது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அலுவலகம் சென்றோர் திரும்பி வரும் நேரத்தில் மழை பெய்ததால் மக்கள் அவதிக்குள்ளாகும் நிலையும் ஏற்பட்டது.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}