சென்னை: சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு பரவலாக இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
வானிலை மையத்தின் அறிவிப்பின்படி கேடிசிசி பெல்ட் எனப்படும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்யும். இவை தவிர திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கும் அளவுக்கு மழை இருக்கும். போக்குவரத்து பாதிக்கப்படும் அளவுக்கு சில இடங்களில் மழை இருக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பரவலாக ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை விட்டு விட்டு வெளுத்துக் கொண்டுள்ளது. சென்னையில் சில நாட்களாகவே வானம் மூடிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் பெரிதாக மழை இல்லை. இந்த நிலையில் இன்று மாலை சூப்பரான மழையை மக்கள் காண நேர்ந்தது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அலுவலகம் சென்றோர் திரும்பி வரும் நேரத்தில் மழை பெய்ததால் மக்கள் அவதிக்குள்ளாகும் நிலையும் ஏற்பட்டது.
அம்பானி வீட்டு மின்சார கட்டணம் எவ்வளவு தெரியுமா? கேட்ட நீங்களே ஆசந்து போவீங்க!
யாருடன் கூட்டணி?...டிடிவி தினகரன் நாளை கட்சியினருடன் ஆலோசனை
யூடியூப் பார்த்து வெண்காரம் வாங்கி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை புறக்கணித்த 30 உறுப்பினர்கள்
பாஜகவின் புதிய தேசிய தலைவராக நிதின் நபின் பதவியேற்பு
பல ஆயிரம் கோடி லஞ்சம்... இது தான் திமுக அமைச்சர் கே.என். நேருவின் சாதனைகள்: அண்ணாமலை
கவர்னரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை...சபாநாயகர் அப்பாவு விளக்கம்
கள்ளக்குறிச்சி ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடிப்பு - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
நெற்றிக்கண் திறப்பினும்....!
{{comments.comment}}