சென்னை: சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு பரவலாக இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
வானிலை மையத்தின் அறிவிப்பின்படி கேடிசிசி பெல்ட் எனப்படும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்யும். இவை தவிர திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கும் அளவுக்கு மழை இருக்கும். போக்குவரத்து பாதிக்கப்படும் அளவுக்கு சில இடங்களில் மழை இருக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பரவலாக ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை விட்டு விட்டு வெளுத்துக் கொண்டுள்ளது. சென்னையில் சில நாட்களாகவே வானம் மூடிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் பெரிதாக மழை இல்லை. இந்த நிலையில் இன்று மாலை சூப்பரான மழையை மக்கள் காண நேர்ந்தது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அலுவலகம் சென்றோர் திரும்பி வரும் நேரத்தில் மழை பெய்ததால் மக்கள் அவதிக்குள்ளாகும் நிலையும் ஏற்பட்டது.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}