சென்னை, புறநகர்களில் பரவலாக கன மழை.. அடுத்த 2 மணி நேரத்துக்கு இதுதான் அப்டேட்!

Jul 18, 2024,05:42 PM IST

சென்னை: சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு பரவலாக இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.


வானிலை மையத்தின் அறிவிப்பின்படி கேடிசிசி பெல்ட் எனப்படும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்யும். இவை தவிர திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




சில இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கும் அளவுக்கு மழை இருக்கும். போக்குவரத்து பாதிக்கப்படும் அளவுக்கு சில இடங்களில் மழை இருக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.


தமிழ்நாடு முழுவதும் பரவலாக ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை விட்டு விட்டு வெளுத்துக் கொண்டுள்ளது. சென்னையில் சில நாட்களாகவே வானம் மூடிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் பெரிதாக மழை இல்லை. இந்த நிலையில் இன்று மாலை சூப்பரான மழையை மக்கள் காண நேர்ந்தது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அலுவலகம் சென்றோர் திரும்பி வரும் நேரத்தில் மழை பெய்ததால் மக்கள் அவதிக்குள்ளாகும் நிலையும் ஏற்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்