ஆந்திராவில் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கும் கூகுள்... இன்று ஒப்பந்தம் கையெழுத்து!

Oct 14, 2025,05:31 PM IST

டெல்லி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கூகுள் நிறுவனத்தின் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைய உள்ளது. இதற்கான ஒப்பந்தம் டெல்லியில் இன்று கையெழுத்தாகிறது.


கூகுள் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் செயற்கை நுண்ணறிவு மையத்தை நிறுவ உள்ளது. இதனை ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில் அமைக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 1.3 லட்சம் கோடி மதிப்பு கொண்ட இத்திட்டம், 2026 முதல் 2030 வரை படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ளது.


இந்த திட்டத்திற்காக டெல்லியில் கூகுள் நடத்திய பாரத் ஏஐ சக்தி என்ற நிகழ்வில் இந்த ஏஐ ஹப் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. உலகின் 12 நாடுகளில் கூகுளின் சர்வதேச AI மையம் அமைக்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், அஸ்வினி வைஷ்ணவ், ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, மற்றும் கூகுள் கிளவுட் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் குரியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.




இது தொடர்பாக சுந்தர் பிச்சை தனது எக்ஸ் பக்கத்தில், கூகுள் நிறுவனம் விசாகப்பட்டினத்தில் முதல் ஏஐ மையத்தை அமைக்கவுள்ளது. இது குறித்து பிரதமர் மோடியிடம் பேசினேன். ஜிகாவாட் அளவிலான கம்ப்யூட்டர் திறன், புதிய சர்வதேச கடலுக்கடி இணைய இணைப்பு மற்றும் பெரிய உள்கட்டமைப்பு ஆகியவற்றை இந்த மையம் ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் தொழில் நிறுவனங்களுக்கும் பயனர்களுக்கும் கூகுளின் அதிநவீனத் தொழில்நுட்பம் கொண்டு செல்லப்படும். இது ஏஐ கண்டுபிடிப்புகளைத் துரிதப்படுத்தி, நாடு முழுவதும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்