சென்னை: நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார். அவருக்கு வயது 67. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சுப்பிரமணியன் என்ற இயற் பெயர் கொண்ட நடிகர் கவுண்டமணி, தமிழ்த் திரையுலகின் மிகப் பெரிய காமெடி நடிகர்களில் ஒருவர். அவருக்கு இணையான காமெடியனை இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்க்கவில்லை. காமெடி மட்டுமல்லாமல் குணச்சித்திரம், வில்லத்தனம், ஹீரோ என பல வேடங்களில் நடித்துள்ளார் கவுண்டமணி.

சமூக சீர்திருத்தக் கருத்துக்களை போகிற போக்கில் சொல்லி புரட்சிகரமான நடிகராகவும் விளங்கியவர் கவுண்டமணி. கடந்த 1963ம் ஆண்டு அவருக்கும் சாந்திக்கும் திருமணம் நடைபெற்றது. இது காதல் திருமணமாகும். இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். 67 வயதான சாந்தி உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தவர் இன்று மரணமடைந்தார்.
சாந்தியின் மறைவைத் தொடர்ந்து திரையுலகினர் பலரும் கவுண்டமணிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஏகாதசி விரதத்தை விட கோடி மடங்கு பலன் தரும் அபூர்வ காலம் விஷ்ணுபதி புண்ணிய காலம்!
கோவை மாணவர் கொலை வழக்கு: உதயநிதியின் குற்றச்சாட்டு அமைச்சர் கொடுத்த பதிலடி
Travel story: ஏழு வருடங்கள் போதாது.. அந்த 7 நாள் அனுபவத்தைச் சொல்ல.. ஒரு மினி தொடர்!
Monday Motivation: அலட்சியம் தவிர்ப்போம்!! ஆனந்தமாய் வாழ்வோம்!!
தமிழக சட்டமன்றம் இன்று மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடக்கம்
NATIONAL TELL A JOKE DAY.. "WIFE..ன்னா என்ன தெரியுமாங்க?"
Sunday Special: சாத்தூரில் சுவாரஸ்யம்.. 55 வயதில் குழந்தைகளாக மாறிய முன்னாள் மாணவர்கள்!
எளிதில் மந்திரியாக எளிய வழி!
கவிதை வராவிட்டாலும் எழுது
{{comments.comment}}