சென்னை: நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார். அவருக்கு வயது 67. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சுப்பிரமணியன் என்ற இயற் பெயர் கொண்ட நடிகர் கவுண்டமணி, தமிழ்த் திரையுலகின் மிகப் பெரிய காமெடி நடிகர்களில் ஒருவர். அவருக்கு இணையான காமெடியனை இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்க்கவில்லை. காமெடி மட்டுமல்லாமல் குணச்சித்திரம், வில்லத்தனம், ஹீரோ என பல வேடங்களில் நடித்துள்ளார் கவுண்டமணி.

சமூக சீர்திருத்தக் கருத்துக்களை போகிற போக்கில் சொல்லி புரட்சிகரமான நடிகராகவும் விளங்கியவர் கவுண்டமணி. கடந்த 1963ம் ஆண்டு அவருக்கும் சாந்திக்கும் திருமணம் நடைபெற்றது. இது காதல் திருமணமாகும். இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். 67 வயதான சாந்தி உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தவர் இன்று மரணமடைந்தார்.
சாந்தியின் மறைவைத் தொடர்ந்து திரையுலகினர் பலரும் கவுண்டமணிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Sunday Short story: எதார்த்தம்!
கவிதை வராவிட்டாலும் எழுது
தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!
கடவுள் ஏன் கல்லானார்?
Sunday Special: சாத்தூரில் சுவாரஸ்யம்.. 55 வயதில் குழந்தைகளாக மாறிய முன்னாள் மாணவர்கள்!
சுதந்திர தாகம் தணிந்து... சுதந்திர மோகம் எழுந்தது ஏனோ???
தீரமும் வீரமும் செறிந்த.. விடுதலை முழக்கம்.. சுதந்திரக் காற்றை சுவாசிக்க இந்தியா கடந்து வந்த பாதை!
முதல்வர் விஜய்யின் முதல் சுதந்திர தினம்.. கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார்
அறிவுஜீவி நக்சலைட்டுகளால் நாட்டுக்கு ஆபத்து.. களையெடுத்து அகற்ற வேண்டும்.. பிரதமர் மோடி பேச்சு
{{comments.comment}}