சென்னை: நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார். அவருக்கு வயது 67. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சுப்பிரமணியன் என்ற இயற் பெயர் கொண்ட நடிகர் கவுண்டமணி, தமிழ்த் திரையுலகின் மிகப் பெரிய காமெடி நடிகர்களில் ஒருவர். அவருக்கு இணையான காமெடியனை இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்க்கவில்லை. காமெடி மட்டுமல்லாமல் குணச்சித்திரம், வில்லத்தனம், ஹீரோ என பல வேடங்களில் நடித்துள்ளார் கவுண்டமணி.

சமூக சீர்திருத்தக் கருத்துக்களை போகிற போக்கில் சொல்லி புரட்சிகரமான நடிகராகவும் விளங்கியவர் கவுண்டமணி. கடந்த 1963ம் ஆண்டு அவருக்கும் சாந்திக்கும் திருமணம் நடைபெற்றது. இது காதல் திருமணமாகும். இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். 67 வயதான சாந்தி உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தவர் இன்று மரணமடைந்தார்.
சாந்தியின் மறைவைத் தொடர்ந்து திரையுலகினர் பலரும் கவுண்டமணிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தேர்தல் வழக்கு எதிரொலி.. திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தத் தடை
கரூரில்.. 31 பேருக்கு பணியிட ஆணை வழங்கிய முதல்வர் விஜய்.. யார் யாருக்கு எங்கு பணி?
கரூரில் தேர்தல் பிரச்சாரச் சம்பவத்தின் போது நடந்தது என்ன? .. விளக்கிய முதல்வர் விஜய்
Nature: It Is Beautiful.. இயற்கை அழகானது!
Rose Garden.. ரோஜா ரோஜா!
நல்லதுக்காக பொய் சொல்லலாம்.. தப்பே இல்லை!
Work hard in silence.. வெற்றி சத்தமாக பேசட்டும்!
True Friends Force you grow.. நல்ல நண்பர்கள் இருந்தால்...!
Our Heart Looks Deeper Than Our Eyes.. கண்களை விட ஆழமாக ஊடுறுவும் இதயம்!
{{comments.comment}}