சென்னை: ஆளுநர் ஆர். என். ரவி இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடத்திய குடியரசு தின விழா வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக கூட்டணிக் கட்சிகள் மொத்தமாக பங்கேற்கவில்லை. அதேசமயம், அதிமுக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகள் கலந்து கொண்டன.
குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. முக்கிய நிகழ்வுகளின்போது ஆளுநர் மாளிகையில் சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்படும். அந்த வகையில் இன்றும் சிறப்பு விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசு, பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், பல்துறைப் பிரமுகர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இன்று மாலை தொடங்கிய விருந்து நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வரவில்லை.

அதேபோல நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அக்கட்சிகளும் நிகழ்ச்சிக்கு வரவில்லை.
அதேசமயம் பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, எச். ராஜா, சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் முன்னாள் ஜெயக்குமார் மற்றும் பாலகங்கா பங்கேற்றனர். தேமுதிக சார்பில் பார்த்தசாரதி கலந்து கொண்டார். பிரேமலதா விஜயகாந்த் வரவில்லை. புதிய தமிழகம் சார்பில் அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டார்.
முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜனும், முன்னாள் ஆளுநர் என்ற அந்தஸ்தில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அண்ணாமலையும், எச். ராஜாவும், ஜெயக்குமாரும் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டது பார்ப்போரின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அவளுடைய கடிகாரம் நின்றபோது.. Paused!
தாய் எட்டடி பாய்ந்தால்; பிள்ளை பதினாரடி பாயுமாம்! (பழமொழியும் உண்மை பொருளும்)
வடதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருக்காம் மக்களே: வானிலை ஆய்வு மையம் தகவல்!
அதிமுக கூட்டணியில் அமமுக.,விற்கு 6 சீட்டா?...உண்மையை உடைத்த டிடிவி தினகரன்
அதிமுக எத்தனை இடங்களில் போட்டி? பாஜக., கேட்பது என்ன?...வெளியான சுவாரஸ்ய தகவல்
தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் இந்திய விவசாயிகளுக்கான குரல்: முதல்வர் முக ஸ்டாலின்!
அதி நவீன வசதிகளுடன் 20 வால்வோ பேருந்துகள்.. சொகுசாக இனி போகலாம்..!
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து.. புளூ பேர்ட் செயற்கைக்கோளுடன்.. விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3-எம்.6
ஆரவல்லி மலைத் தொடர்.. இமயமலைக்கே சீனியர்.. கணிமத் திருடர்களிடம் சிக்கி சிதையும் அவலம்!
{{comments.comment}}