ஆளுநர் ஆர்.என். ரவி. குடியரசு தின விருந்து.. அதிமுக, பாஜக பங்கேற்பு.. திமுக கூட்டணி புறக்கணிப்பு!

Jan 26, 2025,05:49 PM IST

சென்னை: ஆளுநர் ஆர். என். ரவி இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடத்திய குடியரசு தின விழா வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக கூட்டணிக் கட்சிகள் மொத்தமாக பங்கேற்கவில்லை. அதேசமயம், அதிமுக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகள் கலந்து கொண்டன.


குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. முக்கிய நிகழ்வுகளின்போது ஆளுநர் மாளிகையில் சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்படும். அந்த வகையில் இன்றும் சிறப்பு விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசு, பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், பல்துறைப் பிரமுகர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.


இன்று மாலை தொடங்கிய விருந்து நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வரவில்லை.




அதேபோல நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அக்கட்சிகளும் நிகழ்ச்சிக்கு வரவில்லை.


அதேசமயம் பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, எச். ராஜா, சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் முன்னாள் ஜெயக்குமார் மற்றும் பாலகங்கா பங்கேற்றனர். தேமுதிக சார்பில்  பார்த்தசாரதி கலந்து கொண்டார். பிரேமலதா விஜயகாந்த் வரவில்லை. புதிய தமிழகம்  சார்பில் அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி  கலந்து கொண்டார்.


முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜனும், முன்னாள் ஆளுநர் என்ற அந்தஸ்தில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அண்ணாமலையும், எச். ராஜாவும், ஜெயக்குமாரும் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டது பார்ப்போரின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாலிவுட் நாயகி கங்கனா ரணாவத்.. ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார்.. முக்கிய கதாபாத்திரத்தில்!

news

சிவகார்த்திகேயன் அம்மாவின் 70வது பிறந்த நாளை எப்படி கொண்டாடி இருக்கார் பாருங்க!

news

சர்வதேச செய்தி நிறுவனங்கள் உள்பட.. 8000 எக்ஸ் கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவு!

news

இந்தியாவின் அதிரடியால் ஆட்டம் காணும் பாகிஸ்தான்.. பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி!

news

பாகிஸ்தான் ஏவிய 50 டிரோன்களை தடுத்து அழித்த இந்தியா... வியாழக்கிழமை இரவு நடந்தது என்ன?

news

திருச்சிக்கான புதிய பேருந்து நிலையம்.. பஞ்சப்பூரில் பிரம்மாண்டம்.. தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

news

இந்தியா - பாகிஸ்தான் போர்ச் சூழல் எதிரொலி.. ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் சஸ்பெண்ட்: பிசிசிஐ

news

அதிரடித் தாக்குதலில் குதித்த இந்தியா.. பதட்டத்தில் பாகிஸ்தான்.. PSL 2025.. யூஏஇக்கு மாற்றம்!

news

மக்களே வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்.. சண்டிகரில் எச்சரிக்கை சைரன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்