தினமும் உடற்பயிற்சி.. ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அட்வைஸ்!

Apr 24, 2025,06:35 PM IST

சென்னை:  யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராவதும், வெல்வதும் எளிதல்ல. உங்கள் பயணத்துக்கு வாழ்த்துகள். உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.


ஐஏஎஸ்., ஐபிஎஸ்., மற்றும் மத்திய அரசு பணிகளுக்கான குரூப் - ஏ மற்றும் பி பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுகள் கடந்த ஆண்டு ஜூன் 16ம் தேதி முதல் கட்ட தேர்வு நடைபெற்றது. இதில் 9 லட்சத்து 92 ஆயிரத்து 599 தேர்வர்கள் விண்ணப்பித்தனர்.அவர்களில் 5 லட்சத்து 83 ஆயிரத்து 213 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 14,627 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு ஜனவரி 7 முதல் ஏப்ரல் 17 வரையில் நேர்முகத் தேர்வுகள்  நடத்தப்பட்டன. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதி முடிவு நேற்று வெளியாகின.




இந்தத் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் அதிகமான தேர்ச்சியாகும். இந்தாண்டு நடந்த தேர்வில் முதல் 100 இடங்களுக்குள் தமிழகத்தை சேர்ந்த 6 பேர் இடம்பெற்றுள்ளனர். அதில், தர்மபுரியை சேர்ந்த சிவசந்திரன் தேசிய அளவில் 23வது இடத்தையும், மாநில அளவில் முதலிடத்தையும் பிடித்து உள்ளனர். 


இந்நிலையில் , யுபிஎஸ்சி 2024 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தேர்வுக்கு தயாராவதும், வெல்வதும் எளிதல்ல. உங்கள் பயணத்துக்கு வாழ்த்துகள். உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். தொடர்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டே இருங்கள். பொது அறிவையும் வளர்த்துக் கொள்ளுங்கள் என்று யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆளுநர் ரவி அறிவுரை வழங்கியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வானிலை கொடுத்த அப்டேட்.. இன்றும், நாளையும் எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும் தெரியுமா?

news

மதுரையின் வளர்ச்சிக்கு போடப்படும் தடைக்கற்களை தகர்த்தெரிவோம்:முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு!

news

அரசியல் கட்சிகளுக்கான SOP ரெடி.. உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது தமிழ்நாடு அரசு!

news

திமுக அரசு ₹4,000 கோடியில் ஊழல் செய்வதற்கு மட்டுமே, விதிகளை மீறி கால நீட்டிப்பு செய்கிறது: அண்ணாமலை

news

பாஜக அரசின் ஒரவஞ்சனப்போக்கை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்: செல்வப்பெருந்தகை!

news

17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகள்

news

மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகம் செய்கிறது திமுக அரசு –அன்புமணி ராமதாஸ் வேதனை

news

சமூக வலைதளங்களில் இளையராஜா படத்தை பயன்படுத்த தடை: சென்னை உயர்நீதி மன்றம்

news

மதுரை, கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை!

அதிகம் பார்க்கும் செய்திகள்