சென்னை: யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராவதும், வெல்வதும் எளிதல்ல. உங்கள் பயணத்துக்கு வாழ்த்துகள். உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
ஐஏஎஸ்., ஐபிஎஸ்., மற்றும் மத்திய அரசு பணிகளுக்கான குரூப் - ஏ மற்றும் பி பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுகள் கடந்த ஆண்டு ஜூன் 16ம் தேதி முதல் கட்ட தேர்வு நடைபெற்றது. இதில் 9 லட்சத்து 92 ஆயிரத்து 599 தேர்வர்கள் விண்ணப்பித்தனர்.அவர்களில் 5 லட்சத்து 83 ஆயிரத்து 213 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 14,627 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு ஜனவரி 7 முதல் ஏப்ரல் 17 வரையில் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதி முடிவு நேற்று வெளியாகின.

இந்தத் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் அதிகமான தேர்ச்சியாகும். இந்தாண்டு நடந்த தேர்வில் முதல் 100 இடங்களுக்குள் தமிழகத்தை சேர்ந்த 6 பேர் இடம்பெற்றுள்ளனர். அதில், தர்மபுரியை சேர்ந்த சிவசந்திரன் தேசிய அளவில் 23வது இடத்தையும், மாநில அளவில் முதலிடத்தையும் பிடித்து உள்ளனர்.
இந்நிலையில் , யுபிஎஸ்சி 2024 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தேர்வுக்கு தயாராவதும், வெல்வதும் எளிதல்ல. உங்கள் பயணத்துக்கு வாழ்த்துகள். உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். தொடர்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டே இருங்கள். பொது அறிவையும் வளர்த்துக் கொள்ளுங்கள் என்று யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆளுநர் ரவி அறிவுரை வழங்கியுள்ளார்.
வாயில் வடை சுடும் அரசு இது அல்ல... சாதனை திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு: முதல்வர் முக ஸ்டாலின்!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தமிழக அரசின் 8 திட்டங்கள் குறித்து அறிவிப்பு: முதல்வர் முக ஸ்டாலின்
பாமக.,வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்...அன்புமணி அறிவிப்பு...என்ன செய்ய போகிறார் ராமதாஸ்?
ராஜ்ய சபா சீட் கொடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை: பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' பட கதை திருட்டு புகாரில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சம வேலைக்கு சம ஊதியம்: போராடிய ஆசிரியர்கள் மீது அடக்குமுறை: அண்ணாமலை கண்டனம்!
ஜனநாயகன் இசை வெளியீட்டுக்காக மலேசியா புறப்பட்டார் விஜய்
போராட்டத்தில் திடீர் பரபரப்பு... மயங்கி விழுந்த ஆசிரியை... பதற்றத்தில் போராட்டக் களம்!
கரை தேடி வந்து உயிர்களை உள்வாங்கிய தினம்...!
{{comments.comment}}