சென்னை: தமிழ்நாடு ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களும் நேற்று சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட நிலையில், நாளை சுப்ரீம் கோர்ட்டில் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில், ஆளுநர் ஆர். என். ரவி இன்று மாலை டெல்லி செல்கிறார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையிலான மோதல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ரவி எந்த மசோதாவுக்கும் ஒப்புதல் தர மறுக்கிறார். அரசின் செயல்பாடுகளை ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு செயல்படுகிறார் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கை நவம்பர் 10ம் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது. முடிவெடுக்க வேண்டும் அல்லது திருப்பி அனுப்ப வேண்டும். ஆளுநர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி கிடையாது என்று கூறி ஆளுநர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 20ம் தேதிக்கு அதாவது நாளைக்கு ஒத்திவைத்தது.

இந்த உத்தரவு வந்த பிறகு ஆளுநர் தன் வசம் நிலுவையில் இருந்த 10 மசோதாக்களை விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பினார். ஆனால் அந்த பத்து மசோதாக்களையும் ஒரு புள்ளி, கமா கூட மாற்றாமல், நேற்று சட்டசபையைக் கூட்டி மீண்டும் தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது தமிழ்நாடு அரசு.
இந்த நிலையில் ஆளுநர் ஆர். என். ரவி இன்று மாலை 5 மணியளவில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். நாளை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட வேண்டிய விளக்கம் தொடர்பாக அவர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக டெல்லி செல்வதாக கூறப்படுகிறது.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}