இரு மொழிக் கொள்கையால்.. இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இழப்பு.. ஆளுநர் ஆர் என் ரவி வேதனை!

Feb 28, 2025,07:51 PM IST
சென்னை: தமிழ்நாடு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த பெரும் தேவை உள்ளது. இரு மொழிக் கொள்கையால் இங்கு உள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழக்கின்றனர். இது உண்மையில் நியாயமற்றது என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.

மத்திய அரசு அறிவித்த மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வோம் என்ற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே சமயத்தில் திமுக சார்பில் மாணவ அமைப்பினரும்  போராட்டம் நடத்தி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் முதல்வர் மு.க. ஸ்டாலின் கழகத் தொண்டர்களுக்கு இந்தி திணிப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனைகளின் உண்மை தன்மையை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகிறார்.

இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்த பெரும் தேவை உள்ளது. இரு மொழிக் கொள்கையால் இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை இழக்கின்றனர் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதவிட்டுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,



தென் தமிழ்நாட்டின் கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், இளைஞர் தொடக்க நிறுவனங்கள், பெண் தொழில்முனைவோர், MSME துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஏராளமான தலைவர்களுடன் கலந்துரையாடினேன். மேலும் பல நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டனர். ஏராளமான சிரமங்கள் மற்றும் முறையான தடைகள் இருந்தபோதிலும், அவர்களின் நேர்மறையான ஆற்றலும் நிறுவனமும் வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவதைக் காண்பது ஊக்கமளிப்பதாக இருந்தது. இந்தப் பகுதி மனித மற்றும் இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது. ஆனால் இது புறக்கணிக்கப்பட்டு பின்தங்கி உள்ளதாக உணர்வை தருகிறது. 

தொழில்மயமாக்கலுக்கான மிகப்பெரிய ஆற்றல் இருந்தபோதிலும், இங்குள்ள மக்கள் வாய்ப்புகள் புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறார்கள். இளைஞர்களிடையே போதைப்பொருள்/போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் சிக்கல்கள் தீவிரமானவை. தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ செயல்படுத்துவதற்கான பெரும் தேவை உள்ளது. 

இந்த தமிழ்நாடு  அரசு பின்பற்றும்   இரு மொழிக் கொள்கையால்  அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது இந்தப் பகுதியின் இளைஞர்கள்  வேலை வாய்ப்புகளை பெரிதும் இழந்ததாக உணர்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக இந்திக்கு எதிர்ப்பு என்ற பெயரில் வேறு எந்த தென்னிந்திய மொழிகளையும் படிக்க அனுமதிக்கப்படவில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். 

ஹிந்தியை எதிர்க்கிறோம் என எந்த தென் மாநில மொழிகளையும் கூட படிக்க இளைஞர்கள் அனுமதிக்கப்படவில்லை. இது உண்மையில் நியாயமற்றது. நமது இளைஞர்களுக்கு மொழியைப் படிக்க ஒரு தேர்வு இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அறிவுக்கும் ஒரு திருக்கோவில் இருக்கு.. ஆழியாறு போனா இதை மறக்காதீங்க!

news

கோப்பையை ராகுல் டிராவிட், லட்சுமணுக்கு அர்ப்பணிக்கிறேன்.. கெளதம் கம்பீர் நெகிழ்ச்சி

news

தோல்விகள் பாடங்களைக் கற்பிக்கலாம்,.. ஆனால் வெற்றிகள் மட்டுமே வரலாற்றை எழுதும்!

news

India T20 World Cup Champion: அகமதாபாத்தில் புதிய வரலாறு.. 3வது டி 20 உலகக் கோப்பையை வென்றது இந்தியா

news

T20 Cricket World Cup Finals: அகமதாபாத்தை அதிர விட்ட இந்தியா.. அடுத்தடுத்து பல உலக சாதனைகள் காலி!

news

இந்திய பேட்டிங் வேகத்தை சீர்குலைத்த ஜிம்மி நீஷம்.. சுத்த மோசம்.. ஒரே ஓவரில் 3 விக்கெட்கள்!

news

ஹாட்ரிக் அரை சதம்.. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வித்தை காட்டிய சஞ்சு சாம்சன்!

news

பேச வேண்டிய நேரத்தில் பேட் பேசும்.. சுனில் கவாஸ்கரின் வாயை.. அதிரடியாக மூடிய அபிஷேக் சர்மா!

news

அபிஷேக் - சஞ்சு சாம்சன் அதிரிபுதிரி ஆட்டம்.. பாகிஸ்தான் உலக சாதனையை முறியடித்த இந்தியா!

அதிகம் பார்க்கும் செய்திகள்