டிரம்ப் மீது 2வது முறையாக துப்பாக்கிச் சூடு...அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு

Sep 16, 2024,09:30 AM IST

வாஷிங்டன் :   அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது இரண்டாவது முறையாக மீண்டும் துப்பாக்கிச் சூடு தாக்குதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவை மீண்டும் பரபரப்பாக்கி உள்ளது. 


அமெரிக்காவில் புதிய அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடக்க உள்ளது. இதற்கான பிரச்சாரங்கள் அமெரிக்காவில் காரசாரமாக சென்று கொண்டிருக்கிறது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் போட்டுகிறார்கள். அதிபர் தேர்தலில் இவர்கள் இருவரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கமலா ஹாரிஸ் பற்றி டிரம்ப் முன் வைக்கும் விமர்சனங்களும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.




இந்நிலையில் ஜூலை மாதம் பென்சில்வேனியாவில்  அதிபர் தேர்தலுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த டிரம்ப் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினார். இதில் அதிர்ஷ்டவசமாக டிரம்ப் உயிர் தப்பினார். துப்பாக்கி குண்டு அவரது வலது காதில் பட்டதால், அவருக்கு காயம் ஏற்பட்டது. இது பரபரப்பு சற்று அடங்கி, தற்போது தேர்தல் பிரசாரத்தில் குறித்து அனைவரும் தீவிரமாக கவனம் செலுத்த துவங்கினர். இந்நிலையில் டிரம்ப் மீது மீண்டும் தற்போது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


புளோரிடா மாகாணத்தில் உள்ள தனது வீட்டில் டிரம்ப், கோல்ப் மைதானத்தில் இருந்த போது அவரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்வதற்கு முயற்சி நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது டிரம்ப்பை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் கிடையாது என்றும், மைதானத்திற்கு அருகே இரண்டு இரண்டு நபர்கள் இடையே இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் உடனடியாக டிரம்ப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என சொல்லப்பட்டார்.


இரண்டாவது முறையாக டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி செய்யப்பட்டுள்ள விவகாரம் அமெரிக்க மக்களிடமும், அதிபர் தேர்தலிலும் பரபரப்பை கிளப்பி உள்ளது. தற்போது டிரம்ப் பாதுகாப்பாகவும், நலமுடனும் இருப்பதாக குடியரசுக் கட்சி சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Operation Sindoor: நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

news

விராட் கோலி, ரோஹித் சர்மா இல்லாமல் இங்கிலாந்து போகும் இந்திய அணி.. யாருக்கெல்லாம் வாய்ப்பு?

news

மக்களே என்ஜாய்..தமிழ்நாட்டில் இன்றும், 14, 15 ,16, தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு..!

news

சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு புதிய சிக்கல்.. படத்திற்கு தடை கோரி பாஜக வழக்கு..!

news

அடிக்குது வெயிலு.. கோடைக் கொடுமையை சமாளிக்க.. சூப்பரான நுங்கு.. ஜில் ஜில் நன்மைகள்!

news

கோவையில் நடைபெற இருந்த.. இசைஞானி இளையராஜா இசை கச்சேரி..மே 31 தேதிக்கு ஒத்திவைப்பு..!

news

Attention Sugar Patients: சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய.. 5 கிளைசெமிக் உணவுகள்!

news

விழுப்புரம் மிஸ் திருநங்கை நிகழ்ச்சியில்.. திடீரென மயங்கி விழுந்த விஷால்.. என்னாச்சு?

news

இந்திய பங்கு சந்தைகளில் காலையிலேயே ஏற்றம்.. உயர்வைக் கண்ட சென்ஸெக்ஸ் மற்றும் நிப்டி

அதிகம் பார்க்கும் செய்திகள்