- சிவ.ஆ. மலர்விழி ராஜா
வீரத்தில் தோன்றிய
விளை நிலமாக.....
எங்கள் பாரதத்தின்
ஒளி வீசும்
கவி நிலவாக...
எட்டயபுரத்தின்
எழுச்சி மிகு
தோன்றலாக.....
செந்தமிழுக்கு தலைவணங்கி
நிற்கும்
நாயகனாக......
அநீதியை எதிர்த்து
போரிட்டு நிற்கும்
வீரனாக.....

காவியம் படைக்கும்
கவிஞருக்கு
எல்லாம்
கவிஞனாக......
முடிவில்லா தமிழுக்கு
முதன்மையான
தலைவனாக.....
முத்தமிழின் இன்பத்தை
இதயத்தில் ரசிக்கும் ரசிகனாக......
பராசக்தி அன்னையின் மீதுள்ள பக்தியின்
பக்தனாக......
தமிழினத்தின்
அன்புக்கு
அடிபணியும்
அரசனாக.....
பாரத தாயின்
பாசமிகு
மகனாக......
கார்வண்ண
கண்ணனின்
தோழனாக........
கண்ணம்மா வின்
இதயம் விரும்பிய
காதலனாக......
கன்னி பெண்களின்
கற்புக்கு
காவலனாக.....
எங்கள் பாரதம்
போற்றும்
பாரதியே........
வாழிய நின் புகழ்....
வாழிய செந்தமிழ்.....
வானுள்ள வரையில்
வையகம் போற்றிட....
எங்கள் பாரதம்
தந்த பரிசே
எங்கள்
பாரதி.....
வாழிய வாழிய வே....!
(சிவ.ஆ. மலர்விழி ராஜா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
என்னுள் எழுந்த (தீ)!
144 வயதைத் தொட்ட மகாகவி.. காலம் உள்ளவரை நீளும் பாரதியின் தீ வரிகள்!
பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்
வீரத்தின் விளை நிலம் எங்கள் பாரதியே....!
ஆட்டுக்கொட்டகையில் பிறந்து வளர்ந்து.. கொடூரனுக்கு எதிராக கொதித்தெழுந்த பெத்தனாட்சி!
சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது.. தமிழ்நாடு பெருமை கொள்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நாமும் உணரும் திறனும்.. (Our sensitivity)
தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்... இன்றைய விலை நிலவரம் இதோ
சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல் பணிகள்.. டிசம்பர் 15 முதல் அஇஅதிமுக விருப்பமனு!
{{comments.comment}}