- சிவ.ஆ. மலர்விழி ராஜா
வீரத்தில் தோன்றிய
விளை நிலமாக.....
எங்கள் பாரதத்தின்
ஒளி வீசும்
கவி நிலவாக...
எட்டயபுரத்தின்
எழுச்சி மிகு
தோன்றலாக.....
செந்தமிழுக்கு தலைவணங்கி
நிற்கும்
நாயகனாக......
அநீதியை எதிர்த்து
போரிட்டு நிற்கும்
வீரனாக.....

காவியம் படைக்கும்
கவிஞருக்கு
எல்லாம்
கவிஞனாக......
முடிவில்லா தமிழுக்கு
முதன்மையான
தலைவனாக.....
முத்தமிழின் இன்பத்தை
இதயத்தில் ரசிக்கும் ரசிகனாக......
பராசக்தி அன்னையின் மீதுள்ள பக்தியின்
பக்தனாக......
தமிழினத்தின்
அன்புக்கு
அடிபணியும்
அரசனாக.....
பாரத தாயின்
பாசமிகு
மகனாக......
கார்வண்ண
கண்ணனின்
தோழனாக........
கண்ணம்மா வின்
இதயம் விரும்பிய
காதலனாக......
கன்னி பெண்களின்
கற்புக்கு
காவலனாக.....
எங்கள் பாரதம்
போற்றும்
பாரதியே........
வாழிய நின் புகழ்....
வாழிய செந்தமிழ்.....
வானுள்ள வரையில்
வையகம் போற்றிட....
எங்கள் பாரதம்
தந்த பரிசே
எங்கள்
பாரதி.....
வாழிய வாழிய வே....!
(சிவ.ஆ. மலர்விழி ராஜா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
Vijay Birthday: முதல்வராக முதல் முறையாக.. 52வது பிறந்த நாளைக் கொண்டாடத் தயாராகும் விஜய்
தீதறு தெளிவு கொள்.. செய்வது துணிந்து செய்.. நிறத்தால் அல்ல நெஞ்சால் வாழ்க!
அதிமுக தேர்தல் தோல்வி எதிரொலி: மாவட்ட வாரியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
பாஜவிலிருந்து விலகி தவெகவில் இணைகிறார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி
லியோனல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை வேட்டை எப்போது தொடங்குகிறது?
கருவினிலே கற்றுக் கொடுங்கள்
குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்!
சிந்தனைச் சிதறல்.. உமிழ்ந்திடும் நீராக இல்லாமல் உறிஞ்சிடும் நீராக இருப்போம்!
Tamil Short Poem: வலை!
{{comments.comment}}