- சிவ.ஆ. மலர்விழி ராஜா
வீரத்தில் தோன்றிய
விளை நிலமாக.....
எங்கள் பாரதத்தின்
ஒளி வீசும்
கவி நிலவாக...
எட்டயபுரத்தின்
எழுச்சி மிகு
தோன்றலாக.....
செந்தமிழுக்கு தலைவணங்கி
நிற்கும்
நாயகனாக......
அநீதியை எதிர்த்து
போரிட்டு நிற்கும்
வீரனாக.....

காவியம் படைக்கும்
கவிஞருக்கு
எல்லாம்
கவிஞனாக......
முடிவில்லா தமிழுக்கு
முதன்மையான
தலைவனாக.....
முத்தமிழின் இன்பத்தை
இதயத்தில் ரசிக்கும் ரசிகனாக......
பராசக்தி அன்னையின் மீதுள்ள பக்தியின்
பக்தனாக......
தமிழினத்தின்
அன்புக்கு
அடிபணியும்
அரசனாக.....
பாரத தாயின்
பாசமிகு
மகனாக......
கார்வண்ண
கண்ணனின்
தோழனாக........
கண்ணம்மா வின்
இதயம் விரும்பிய
காதலனாக......
கன்னி பெண்களின்
கற்புக்கு
காவலனாக.....
எங்கள் பாரதம்
போற்றும்
பாரதியே........
வாழிய நின் புகழ்....
வாழிய செந்தமிழ்.....
வானுள்ள வரையில்
வையகம் போற்றிட....
எங்கள் பாரதம்
தந்த பரிசே
எங்கள்
பாரதி.....
வாழிய வாழிய வே....!
(சிவ.ஆ. மலர்விழி ராஜா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
5 மாநில சட்டசபை தேர்தல் 2026: இன்று மாலை வெளியாகிறது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
Deepa Ravi Poem: பரந்து விரிந்த வானம்.. வியந்து தான் போகிறேன்!
சர்வதேச நடன தினம் 2026: கலை உலகில் காலடி எடுத்து வைக்கும் இளம் தாரகை வேதா ஸ்ரீ
செந்தில் பாலாஜி மீதான டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கு: சிபிஐ.,க்கு மாற்ற உத்தரவு
Tamil Nadu: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில்.. மாணவர் சேர்க்கை 1 லட்சத்தைத் தாண்டி அசத்தல்!
விஜய்யின் திடீர் திருச்செந்தூர் விசிட்...யாருப்பா அந்த ஜோசியர்?
துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரின் பெரிய வேன் முன் செல்ல.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 3)
சமையல் துணுக்குகள்: ஹோட்டல் ஸ்டைல் பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசாலா!
Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. சிவப்பு மை கொடுத்த சிகரம்!
{{comments.comment}}