புவியதனைப்போற்றுவோம்!

Oct 18, 2025,03:29 PM IST
- அ.விசாலாட்சி

புவியும் பெண்ணும் ஒன்றல்லோ!! ஆதலின்
புவியதனைப் போற்றுவோம் !!!!
ஓரடிக்கு சண்டையிட்டு ஆறடிக்கு மண்டியிடுகிறோம் !!

வசந்தமும் வாழ்க்கையும் வஞ்சகமும் கொஞ்சியே....
வாழ்வாங்கு வாழ்ந்த புவியிலே வாடி ....
நிற்குதடா மானிடம்.... வாழவும் நினைக்குதடா!!!! 

கொடும் பகையும் கொள்கையில்லா பற்றும்....
பித்து பிடிக்க வைத்ததடா..இப்புவியில்
மாண்பில்லா மாசும் மண்ணில் பறக்கும் தூசும்
மூச்சை முட்ட வைத்ததடா-மூவுலகிலும்!!!



நெகிழி நெஞ்சை இறுக்குதடா நெருப்புண்ட நஞ்சால்!!!!
நன்னீரும் உந்நீரும் மண்ணீரும் மதியிழந்து நிற்குதடா!!!!
விதைத்த விதையெல்லாம் மூச்சடைத்து மாண்டதடா!!!
 மண்ணை கொஞ்சிய பூச்சிக்கொல்லி தெளிப்பானால்!!!!
அண்ணாந்து பார்த்த மரமெல்லாம் அகால மரணமடா!!!

வான் தரும் தாய்ப்பால் தட்டுப்பாட்டால்!!!!
கால்நடைகளுக்கும் கட்டுப்பாடு
காலார மேய்ச்சலுக்கு!!!!
கட்டு கட்டாய் தீவன தட்டு புண்ணாக்கில்லாமல்!!
இனவிருத்திக்கும் இனக்கட்டுப்பாடு ஊசிவழி மருந்தால் தானடா !!!!
பாக்கெட்டிலும் பால் அடைத்தானடா!!! ரவிக்கையில்லா மாதரால்!!!!
மழை நீரும் மண்ணை முத்தமிட மறுத்ததடா!!!!
தாரும் சிமெண்ட்டும் சாலையில் கொண்ட குடித்தனத்தால் தானடா !!!!
வேர்களும் அசைந்து ஆட்சி செய்ய முடியவில்லையடா!!!!

மண்ணுக்கடியிலும் அரசியலடா !!!!
மண்ணில் புதையுண்ட நெகிழி கார்ப்பரேட் ஆனதால் தானடா !!!!!
கோடியெடுக்கும் புனலிலும் 
காலடி வைக்க முடியவில்லையடா!!
பொங்கி பேரலையாய் வந்த நுரையால் தானடா !!!
சென்ற இடமெல்லாம் செழுமை தந்த பூமியடா!!!
செக்கிழுக்க தெம்பு தந்த வீரமண்ணடா !!!

காணுமிடத்தில் கண்டதெல்லாம் வீசியே வீணாய் போனோமடா!!!
பொறுமை தான் பூமாதேவிக்கு இல்லையடா !!!-அவள் 
பொங்கியெழுமுன் இப்புவியதனை காப்போமடா!!!
பெண்ணும் புவியும் ஒன்று தானடா!!!
இவ்விரண்டையும் போற்றுவோமடா!!!

(கவிஞர் அ.விசாலாட்சி, M.Sc, B.Ed, D.T.Ed படித்தவர். 2005 ஆம் ஆண்டு தனது ஆசிரியர் பணியை தொடங்கியவர். ஆசிரியர் என்ற பணியைத் தாண்டி பேச்சாளர், கவிஞர் என்று பன்முக திறன் கொண்டவர். "புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்டில் "6 முறை  இடம் பெற்றவர். கிரஸ்ட் இந்தியா பவுண்டேஷன், தர்மபுரி ஆளுமை மிக்க பெண்களுக்காக வழங்கப்படும் "சிங்கப்பெண் விருது-2025"  விருது பெற்றவர்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்