2 பேராசிரியைகளின் தூண்டுதலின் பேரில் பொய்ப் புகார்.. ஹரிபத்மன் மனைவி பரபரப்பு புகார்

Apr 06, 2023,09:30 AM IST
சென்னை: கலாஷேத்ராவைச் சேர்ந்த 2 பெண் பேராசிரியர்களின் தூண்டுதலின் பேரில், எனது கணவர் ஹரி பத்மன் மீது முன்னாள் மாணவி பொய்யான புகாரைக் கொடுத்துள்ளார். இதுகுறித்து மூத்த பெண் காவல்துறை அதிகாரிகளைக் கொண்டு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று உதவிப் பேராசிரியர் ஹரி பத்மனின் மனைவி திவ்யா சென்னை போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கலாஷேத்திரா பவுண்டேஷன் நடத்தி வரும் ருக்மணி தேவி கவின் கலைக் கல்லூரியில் படித்து வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகொடுக்கப்படுவதாக கூறி மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.



இந்த போராட்டத்தைத் தொடர்ந்து முன்னாள் மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் எழுத்துப் பூர்வமாக புகார் கொடுத்தார். அதன் பேரில் உதவிப் பேராசிரியர் ஹரி பத்மன் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், ஆசிரியர்கள் சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர் டிஸ்மிஸ் செய்யப்படுவர் என்று கலாஷேத்திரா நிறுவனம் அறிவித்தது. 

இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக ஹரி பத்மனின் மனைவி திவ்யா சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு பரபரப்புப் புகார் கூறியுள்ளார்.அதில், எனது கணவர் அடுத்த கட்டத்துக்கு முன்னேறும் நிலையில் இருந்ததால் அவரை வளர விடக் கூடாது என்று பேராசிரியர்கள் நிர்மலா நாகராஜன் மற்றும் நந்தினி நாகராஜன் ஆகியோர் தொடர்ந்து சதி செய்து வந்தனர். அவர்களது தூண்டுதலின் பேரில்தான் முன்னாள் மாணவி மூலம் பொய்யான புகாரைக் கொடுத்துள்ளனர்.

புகார் கொடுத்த முன்னாள் மாணவி நான்கு ஆண்டுகளுக்கு முன்பே படிப்பை முடித்து விட்டு கனடாவுக்குப் போய் விட்டார். அவர் கனடா செல்வதற்கு முன்பு எங்களிடம் சொல்லிவிட்டுத்தான் போனார். 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் எங்களது குடும்ப நிகழ்ச்சியிலும் கூட அவர் மகிழ்ச்சியாக கலந்து கொள்ளவும் செய்தார்.

முன்னாள் மாணவி கொடுத்துள்ளது பொய்யான புகாராகும். இந்த விவகாரம் குறித்து மூத்த பெண் காவல்துறை அதிகாரிகளைக் கொண்டு உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும்.  எனது கணவர் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். அவர் தப்பிச் செல்ல முயலவில்லை. கும்பல் தாக்குதல் நடந்து விடாமல் தவிர்க்கும் வகையில்தான் அவர் எங்களது குடும்ப நண்பர் வீட்டில் தங்கியிருந்தார் என்று திவ்யா அதில் கூறியுள்ளார்.

இந்தப் புகார் தற்போது அடையார் துணை காவல் ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஹரிபத்மன் மனைவி கொடுத்துள்ள புகாரை தற்போது போலீஸார் விசாரிக்கவுள்ளனர். கலாஷேத்திரா விவகாரம் வேறு வேறு ரூபத்தில் திரும்பி வருவது மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

India win Women's world cup: அபார பீல்டிங்.. அட்டகாச பவுலிங்.. இந்திய மகளிருக்கு முதல் உலகக் கோப்பை!

news

SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்

news

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

news

அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக

news

SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு

news

அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

news

மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்