வார்த்தைகள் இன்றி .. வெட்கத்தில் காதல் இசையை பரப்பிய.. இலையின் இதயம்!

Apr 08, 2025,02:47 PM IST

- தேவி


பார்வைகள் குளமாக மாறியது.....

விழியின் ஓரம் தேங்கிய நீர்

ஏரிகளாக மாறி உருண்டு ஓடியது....

அது ஆனந்தத்தின் வெள்ளம்!


இதயத் துடிப்புகள்  

யுத்தம் செய்ய தொடங்கின...

தனிமை உண்மையை உரைத்தது....


அவளது நினைவுகள் 

மனதை பிழிந்து  எடுக்க ஆரம்பித்தது..... 

பேசிய வார்த்தைகள் 

மௌனமாக மறைந்து ஒலித்தன...

தென்றல் காற்றும் 

என்னை சுடுவதாக தோன்றியது.... 

மேகங்களும் கருத்து திரண்டு மூட்டமாக மாறின




பார்வைகள் பரவசமாகி 

இதழ்களில் படிந்திருக்கும் துளியாக 

கண்களைக் கவர்ந்தது மலரின் காதல்......

அவளின் விழி ஓரங்களை 

குத்தகை எடுத்து

சுருக்கங்களாக காட்சி அளித்தது 

விரியும் மொட்டுக்கள்...... 


தென்றலினை 

தன் கூந்தலின் இசையில் 

கட்டி போடும் மழையாக 

பொழிந்தது மலரின் தேன் துளி.....

  

வார்த்தைகள் இன்றி 

ஓசைகளாக உரசி சென்ற 

பறவைகளைக் கண்டு 

வெட்கத்தில் காதல் இசையை பரப்பியது  

இலையின் இதயம்...... 


பேச வார்த்தைகள் இருந்தும் 

காதலை பார்வையில் மட்டும் கடத்தி 

மௌனத்தை மொட்டாக 

பரவ விடும் மலரின் இதழ்.....


மனதினை மயக்கி 

பார்வையை ருசித்து 

தேகத்திற்கு புத்துணர்ச்சி கொடுத்தது   

மலரின் மெல்லிதழ் புன்னகை....


தேன் சுவை ஊட்டும் 

அவளது இதழ்களை 

தொட்டணைத்து வட்டமிடும் துளியினை  போல 

மனதினை கட்டி அணைத்து முத்தமிடுகின்றது  

மலரினை தொட்டுத் தழுவும் காதல் துளிகள்...


கொடியின் இடையில் 

தவழும் துளிகளைப் போல 

மலரின் இடையிலும் 

மலர்ந்த துளிகளை கண்டு 

மனம் மயங்கத் தொடங்குகின்றது.....


இதழ் மொட்டுக்களை 

மனம் வெறுப்பதில்லை 

மலரின் மொட்டுக்களை 

மானம் மறப்பதில்லை


காதலின் ஆழத்தை 

கண்களை கண்டு ருசிக்க முடியும் 

மலரின் காதல் மௌனத்தை 

தழும்பும் அழகினை கொண்டு பருக  முடியும்


நித்தம் நித்தம் தேன் சுரக்கும் 

அவளின் இதழ்களின் வரிகளை 

கண்கள் துளைக்க  மறந்ததில்லை 

அதுபோல பார்வையைத் திருடும் 

மலரின் வகிடுகளை 

மனதில் புதைக்க மறப்பதில்லை!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு

news

"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

news

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்

news

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்