தமிழ்நாடு முழுவதும்.. அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்.. வானிலை மையம்

May 03, 2023,11:39 AM IST
சென்னை: தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 நாட்களுக்குப் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழைக்கு இன்று வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்,திருப்பூர், தென்காசி, விருதுநகர், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், வேலூர், திருப்பத்தூர், தஞ்சாவூர், திருவாரூர், காவிரி டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, புதுக்கோட்டை  ஆகிய மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமானது முதல் கன மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலின் தென் கிழக்குப் பகுதியில்,  மே 6ம் தேதி காற்றழுத்தம் ஏற்படும் என்றும் அது மே 7  அல்லது 8ம் தேதி தாழ்வு நிலையாக மாறும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் கடலில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திற்கு பலத்த காற்று வீசக் கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்