தமிழ்நாடு முழுவதும்.. அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்.. வானிலை மையம்

May 03, 2023,11:39 AM IST
சென்னை: தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 நாட்களுக்குப் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழைக்கு இன்று வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்,திருப்பூர், தென்காசி, விருதுநகர், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், வேலூர், திருப்பத்தூர், தஞ்சாவூர், திருவாரூர், காவிரி டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, புதுக்கோட்டை  ஆகிய மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமானது முதல் கன மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலின் தென் கிழக்குப் பகுதியில்,  மே 6ம் தேதி காற்றழுத்தம் ஏற்படும் என்றும் அது மே 7  அல்லது 8ம் தேதி தாழ்வு நிலையாக மாறும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் கடலில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திற்கு பலத்த காற்று வீசக் கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி

news

அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்

news

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?

news

என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி

news

ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு

news

பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

news

திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்

news

எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்