தமிழ்நாடு முழுவதும்.. அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்.. வானிலை மையம்

May 03, 2023,11:39 AM IST
சென்னை: தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 நாட்களுக்குப் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழைக்கு இன்று வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்,திருப்பூர், தென்காசி, விருதுநகர், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், வேலூர், திருப்பத்தூர், தஞ்சாவூர், திருவாரூர், காவிரி டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, புதுக்கோட்டை  ஆகிய மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமானது முதல் கன மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலின் தென் கிழக்குப் பகுதியில்,  மே 6ம் தேதி காற்றழுத்தம் ஏற்படும் என்றும் அது மே 7  அல்லது 8ம் தேதி தாழ்வு நிலையாக மாறும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் கடலில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திற்கு பலத்த காற்று வீசக் கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

news

நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்