சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அடுத்த நான்கு நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தவிர கேரளாவில் இன்றும், நாளையும் மிக மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாம். நாளை மறுநாள் மிக கனமழைக்கும், அடுத்த இரண்டு நாட்கள் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
கர்நாடகாவை பொறுத்தவரை, இன்று முதல் மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை தமிழ்நாடு முழுவதும் நல்ல மழையை பொழிவித்து வருகிறது. நாளை தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மே 24ஆம் தேதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். பின்னர் வட கிழக்கு நோக்கி நகர்ந்து ஒடிசா பகுதியில் நல்ல மழை கொடுக்க வாய்ப்புள்ளதாகவும், மே 25ஆம் தேதி தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக மே 23 மற்றும் 24 தேதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முதல் தமிழ்நாடு முழுவதும் பரவலாக கன முதல் மிக கனமழை கொட்டி தீர்த்ததுள்ளது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை வெளுத்து வாங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நாமக்கல் மாவட்டம் புது சத்திரத்தில் 16 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது.
நாமக்கல் நகரில் 12 சென்டிமீட்டர் மழையும், சேந்தமங்கலம் 10.5 சென்டிமீட்டர் மழையும், ராசிபுரத்தில் 10.3 சென்டிமீட்டர் மழையும் பதிவானது. எருமப்பட்டியில் 7.4 செமீ, குமாரபாளையத்தில் 6.5 செமீ , திருச்செங்கோட்டில் 5 சென்டிமீட்டர் மழை மங்களபுரத்தில் 3.7 சென்டிமீட்டர் மழை பதிவானது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}