தமிழ்நாடு முழுவதும் பரவலாக கன மழை.. 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Nov 04, 2023,07:26 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவ மழை சூடு பிடித்துள்ளது. இன்று தமிழ்நாட்டிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மிக மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தென் தமிழ்நாடு, மத்திய தமிழ்நாடு, கடலோர மாவட்டங்களில் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது.


குறிப்பாக மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதேபோல டெல் மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தென்கோடி, நெல்லை, குமரியிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.




கனமழை எதிரொலியாக தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, மதுரை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல, மயிலாடுதுறை  மாவட்டத்தில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.


தலைநகர் சென்னையிலும் அதிகாலையிலிருந்து கன மழை பெய்து வருவதால் சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்