தமிழ்நாடு முழுவதும் பரவலாக கன மழை.. 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Nov 04, 2023,07:26 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவ மழை சூடு பிடித்துள்ளது. இன்று தமிழ்நாட்டிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மிக மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தென் தமிழ்நாடு, மத்திய தமிழ்நாடு, கடலோர மாவட்டங்களில் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது.


குறிப்பாக மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதேபோல டெல் மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தென்கோடி, நெல்லை, குமரியிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.




கனமழை எதிரொலியாக தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, மதுரை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல, மயிலாடுதுறை  மாவட்டத்தில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.


தலைநகர் சென்னையிலும் அதிகாலையிலிருந்து கன மழை பெய்து வருவதால் சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்