சென்னை: தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவ மழை சூடு பிடித்துள்ளது. இன்று தமிழ்நாட்டிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மிக மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தென் தமிழ்நாடு, மத்திய தமிழ்நாடு, கடலோர மாவட்டங்களில் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது.
குறிப்பாக மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதேபோல டெல் மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தென்கோடி, நெல்லை, குமரியிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

கனமழை எதிரொலியாக தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, மதுரை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல, மயிலாடுதுறை மாவட்டத்தில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையிலும் அதிகாலையிலிருந்து கன மழை பெய்து வருவதால் சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}