திறனறிந்து உதவி செய்!

Apr 10, 2026,02:49 PM IST

- கவிஞர் சகாய தேவி


கொடுத்து கொடுத்து சிவக்கட்டும் கைகள் 

கொடுக்க கொடுக்க பீறிடும் உற்சாகம் 

கொடுத்தல் தந்திடும்  நிம்மதியான தூக்கம் 

கொடுக்க கொடுக்க  இறையுனை நிரப்புவான் 


உதவி கரங்கள் இன்னும் நீளட்டும் 

உழைப்பின் சுகம் உலகில் பரவட்டும் 

ஊதாரித்தனமென  உலகம் சொல்லிட கூடும்  

நடுங்கும் கரங்கள் உண்மையை  உணர்த்திடும் 

நல்லது செய்ய நல்லது நடக்கும் 




உதவும் முன் உண்மை உணர்ந்து அவன் திறனறிந்து உதவிடு 

மீன் கொடுத்து வயிற்றை நிரப்புவதை விட 

மீன்பிடிக்க கற்றுக்கொடு 

பாதுகாப்பதை விட நீரில் தள்ளி நீச்சலடிக்க கற்றுக்கொடு 


அடிமட்ட மக்களை தட்டி எழுப்பிடு 

நிமிர்ந்து நடக்க சொல்லிக்கொடு 

நாளைய தலைமுறை உன் பெயர் சொல்லட்டும் 


(கவிஞர் சகாய தேவி  சகாய சாரல்கள், சென்னை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மாம்பழம் சின்னத்தை முடக்கம்... ராமதாஸ் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

news

அழகிய உள்ளங்களை எப்போதும் மறக்க முடியாது.. A beautiful soul is never forgotten!

news

கவனம் சிதறினால் இலக்கும் தவறும்.. The strongest grip may come undone!

news

ஜனநாயகன் திரைப்படத்திற்காக முதல் ஆளாக குரல் கொடுத்த சிவகார்த்திகேயன்

news

குரங்குகளுக்கும் அடி சறுக்கும்!

news

நல்லவர் போல பலர் உண்டு.. எல்லோரும் நண்பர்கள் அல்ல!

news

காரணமே இல்லாமல் வரும் நேசம்.. ரொம்ப ரொம்ப அழகானது!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

காரைக்குடியில் மக்கள் கூட்டத்திற்கு நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்...ஸ்தம்பித்த சாலைகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்