சென்னை: சினிமா என்பதே ஆணாதிக்கம் நிறைந்தது என்று பொதுவாக சொல்வார்கள்.. இங்கு ஹீரோக்களுக்குத்தான் முதல் மரியாதை.. ஹீரோயின்கள் வெறும் அலங்கார பொம்மைகள் போலத்தான். ஹீரோயின்களை மையமாக வைத்து வரும் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
அந்தக் காலத்திலிருந்து இப்போது வரை அப்படித்தான். ஒரு படம் என்றால் ஹீரோதான் கொண்டாடப்படுவார்.. தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்து இன்றைய தனுஷ் படம் வரை இதுதான் எதார்த்தம். ஆனால் எப்போதாவது பெண்களுக்கு முக்கியத்துவம் தந்து, அதாவது ஹீரோயினை கதை நாயகியாக வைத்து நல்ல படங்கள் வருவதும் இப்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இதில் விசேஷம் என்னவென்றால் தற்போது ஹீரோயின்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அதிக அளவிலான படங்கள் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளன என்பதுதான். திரிஷா நடித்த ராங்கி, நயன்தாரா நடித்த கனெக்ட், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த டிரைவர் ஜமுனா, கோவை சரளா நடித்த செம்பி ஆகியவைதான் இந்தப் படங்கள்.

நான்கு படங்களுமே தியேட்டர்களில் ரசிகர்களின் வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளனர். திரையிலகில் இப்படி ஹீரோயின்களை மையமாக வைத்து வெளியான படங்கள் அதிக அளவில் திரைக்கு வந்திருப்பது இதுவே முதல் முறையாக கருதப்படுகிறது.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி - ராகேஷ் திரையரங்களில் இந்த நான்கு படங்கள்தான் தற்போது ஓடிக் கொண்டுள்ளன. இதுதொடர்பாக தியேட்டரில் வைக்கப்பட்டுள்ள கட் அவுட்கள் வைரலாகி பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளன.
கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து
1500 பக்கங்களில் உருவான திருக்குறளின் கவிக்குரல்.. திருப்பூரில் நூல் வெளியீடு
தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை
கடல் சூழ்ந்த உலகெல்லாம்!
சென்னை ரிப்பன் பில்டிங் அருகில் உள்ள விக்டோரியா ஹால்.. ஒன்டே பிக்னிக்குக்கு சிறந்த ஸ்பாட்!
சிந்தனைச் சிதறல்.. முதியோரை மதியாத சமுதாயம் ஒருகாலும் நிமிராது!.
என்னுள் உறைந்தவன்(ள்)
சிந்தையிலே என் தாயும் தினம் சிந்திக்கச் சொன்னதும் அன்பே...
பாசனத்திற்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
{{comments.comment}}