கள்ளக்குறிச்சியில்.. 60 பேரைக் காவு கொண்ட கள்ளச்சாராய வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு ஹைகோர்ட் உத்தரவு

Nov 20, 2024,06:32 PM IST

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தியதில் 60க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 190 க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கடும்  விமர்சனங்கள் எழுந்தன. 




இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சியை சேர்ந்த கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜன், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பதாக தகவல் வெளியானது. மேலும் இந்த மெத்தனாலை சப்ளை செய்த பலரை  சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 


இந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி எதிர்க்கட்சிகளான பாஜக, பாமக, அதிமுக, தேமுதிக ஆகியவற்றின் சார்பில்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கை சிபிஐக்கு மாற்றி இன்று உத்தரவிட்டது.


இதுதொடர்பான உத்தரவைப் பிறப்பித்து நீதிபதிகள் கூறுகையில்,  மாநில அரசு விசாரணை மேற்கொண்டால் உண்மை வெளிவராது. எனவே விசாரணை அமைப்பை மாற்ற வேண்டும். உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் வழக்கை சிபிஐ அல்லது என் ஐ ஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதில் கள்ளச்சாராய மரணங்கள் நடந்தது காவல்துறைக்கு தெரியாமல் நடந்தது என்பதை ஏற்க முடியாது. மாநில போலீசார் சம்பவத்தை கண்டும் காணாமல் இருந்துள்ளது தெரிகிறது. அதே நேரத்தில் போலீசார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை திரும்பப்பெற்றது தவறு. சிபிசிஐடி விசாரணைகளில் பெறப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மீது கட்டாயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை: டாக்டர் அன்புமணி!

news

என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்

news

அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்.. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு

news

ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

news

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 1996 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்: உடனே விண்ணப்பிக்கவும்!

news

தமிழ் தெரிந்தவர்களுக்கு வடபழநி முருகன் கோவிலில் வேலைவாய்ப்பு: மாதம் ரூ.50,000 வரை சம்பளம்

news

மணக்கமணக்க சாப்பிடலாம்.. மதுரையில் பிரம்மாண்ட உணவுத் திருவிழா 2025.. சுவைக்க வாங்க!

news

இலவச விமானப் பயணம்.. ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தரும் அசத்தலான சலுகை!

news

சாதனை இந்தியர் சுபான்ஷு சுக்லா.. 14ம் தேதி பூமி திரும்புகிறார்.. தடபுடலாக வரவேற்கத் தயாராகும் நாசா!

அதிகம் பார்க்கும் செய்திகள்