இமாச்சல பிரதேசத்திற்கு ரெட் அலர்ட்.. பேய் மழை.. வெள்ளக்காடான பியாஸ்.. 400 சாலைகள் மூடல்

Jul 02, 2025,01:24 PM IST

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை பெய்த கனமழையால் பியாஸ் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ரெட் அலர்ட் விடுத்துள்ளது. 


மக்கள் ஆற்று நீர் மட்டம் உயர்வதை கவலையுடன் பார்த்து வருகின்றனர். அவசர சேவை குழுக்கள் உடனடியாக செயல்பாட்டில் இறங்கியுள்ளன. அனைத்து முக்கிய அணைகளும் பாதுகாப்பாகவும், கட்டுப்பாட்டுக்குள்ளும் இருப்பதாக மாநில அரசு உறுதியளித்துள்ளது. மாநிலத்தில் 406 சாலைகள் மழையால் மூடப்பட்டுள்ளன. இதில் மாண்டி மாவட்டத்தில் மட்டும் 248 சாலைகள் மூடப்பட்டுள்ளன. அங்கு 994 மின்மாற்றிகள் பழுதடைந்துள்ளன. மாநில அவசர செயல்பாட்டு மையம் (SEOC) இதை தெரிவித்துள்ளது. 


எந்த அணையும் உடையும் அபாயம் இல்லை என்று காலை 7:00 மணிக்கு இமாச்சல பிரதேச மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (HPSDMA) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அணைகளின் நீர்மட்டம் பாதுகாப்பான அளவில் உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் உள்ள முக்கியமான அணைகளான சட்லஜ், பியாஸ், ராவி மற்றும் யமுனா ஆகிய நதிகளில் உள்ள அணைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அணைகளுக்கு வரும் நீர் மற்றும் வெளியேறும் நீர் பற்றிய விவரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.




கர்ச்சம் அணை (சட்லஜ் நதி): இந்த அணைக்கு விநாடிக்கு 869.17 கன மீட்டர் நீர் வந்தது. அணையின் மதகுகள் வழியாக 410.21 கன மீட்டர் நீரும், இயந்திரங்கள் மூலம் 477.99 கன மீட்டர் நீரும் வெளியேற்றப்பட்டது.


நட்பா அணை: இந்த அணைக்கு 915 கன மீட்டர் நீர் வந்தது. அணையின் மதகுகள் வழியாக 512.26 கன மீட்டர் நீர் வெளியேற்றப்பட்டது.


கோல் அணை: இந்த அணையின் முழு கொள்ளளவு 642 மீட்டர். தற்போது அணையின் நீர்மட்டம் 637.59 மீட்டராக உள்ளது. அணைக்கு 1,231 கன மீட்டர் நீர் வந்தது. இயந்திரங்கள் மூலம் 734 கன மீட்டர் நீர் வெளியேற்றப்பட்டது.


பண்டோ அணை (பியாஸ் நதி): இந்த அணைக்கு 826.59 கன மீட்டர் நீர் வந்தது. அணையின் மதகுகள் மற்றும் இயந்திரங்கள் மூலம் 673.5 கன மீட்டர் நீர் வெளியேற்றப்பட்டது.


லார்ஜி தடுப்பணை: இந்த அணைக்கு 734.14 கன மீட்டர் நீர் வந்தது. அணையின் மதகுகள் வழியாக 457 கன மீட்டர் நீரும், மின் உற்பத்தி இயந்திரங்கள் மூலம் 234.13 கன மீட்டர் நீரும் வெளியேற்றப்பட்டது.


அதிகப்படியான மழை  காரணமாக சில மின் உற்பத்தி நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. பைரா நீர்மின் திட்டம் (HEP) அதிக மழை காரணமாக காலை 7:00 மணிக்கு மூடப்பட்டது. இதே காரணத்திற்காக சைன்ஜ் தடுப்பணை மற்றும் பார்பதி-II ஆலைகளும் செயல்படவில்லை. கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு மலானா-II HEP ஆகஸ்ட் 1, 2024 முதல் மூடப்பட்டுள்ளது. அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தால், தண்ணீரை வெளியேற்றுவதற்காக அணையின் கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.


தற்போது எந்த ஆபத்தும் இல்லை. வெள்ளத்தை தடுக்க தொடர்ந்து கண்காணித்து, சரியான நேரத்தில் தண்ணீரை வெளியேற்றி வருகிறோம். மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும். அவசரநிலையை தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மாண்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் திடீர் வெள்ளம், மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டாலும், அணைகள் பாதுகாப்பாக உள்ளன. இதற்கு காரணம், அதிகாரிகள் சரியான நேரத்தில் செயல்பட்டு தண்ணீரை வெளியேற்றியது தான். மழை தொடர்ந்து பெய்தால், மக்களை பாதுகாப்பாக வெளியேற்றவும், தண்ணீரை திருப்பி விடவும் அதிகாரிகள் தயாராக உள்ளனர். நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்