அதானியை தொடர்ந்து ஹிண்டன்பர்க் வலையில் சிக்கப்போவது யார்?: அடுத்த ஷாக்கர்!

Mar 23, 2023,12:03 PM IST
புதுடெல்லி: அதானி குழுமம் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்ட ஹிண்டன்பர்க் நிறுவனம், மற்றொரு புதிய நிறுவனம் பற்றிய அறிக்கையை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தை சேர்ந்த தொழிலதிபரான கவுதம் அதானி, மின்சாரம், ஏர்போர்ட், துறைமுகம் போன்ற பல துறைகளில் கால் பதித்து, வெற்றியும் கண்டார். அதானி குழுமத்தில் முதலீடு செய்ய வெளிநாட்டில் இருந்தும் பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. இவரது நிறுவனங்களின் பங்குகளும் எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்தது. அதானியின் சொத்து மதிப்பும் அதிகரித்தது. இந்திய பணக்காரர், ஆசிய பணக்காரர் என படிப்படியாக வளர்ந்து, உலக பணக்காரர் பட்டியலில் 2வது இடம் வரை அசுர வளர்ச்சி கண்டிருந்தார். அவரின் வளர்ச்சிக்கு பேரிடியாக விழுந்தது அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை.


ஆய்வறிக்கையால் வீழ்ச்சி

வரி முறைகேடு, செயற்கையாக பங்கு விலையை ஏற்றியது, சொந்தங்களுக்கு முக்கிய பதவி, அதீத கடன் என அதானி குழுமத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியது ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம். மொத்தம் 413 பக்கங்களை கொண்ட இந்த ஆய்வறிக்கை தான், அதானியின் வாழ்க்கையை மொத்தமாக புரட்டிப்போட்டது. அறிக்கை வெளியான ஒரே வாரத்தில் அதானி குழுமத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 50 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தது.

அரசியல் தாக்கம்

உலகின் 2வது பணக்காரராக ஜொலித்த கவுதம் அதானி, 35வது இடத்துக்கும் கீழ் தள்ளப்பட்டார். இந்த சரிவில் இருந்து மீளமுடியாமல் திணறிய அதானி நிறுவனங்கள் இப்போதுதான் ஓரளவு மீண்டு வருகின்றன. இந்த விவகாரம் இந்திய அரசியலிலும் புயலை கிளப்பியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதானி குழுமத்தின் மீது பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை அமைக்க வலியுறுத்தி பார்லி.,யின் இரு அவைகளையும் தொடர்ந்து முடக்கி வருகின்றன.

அடுத்த அறிக்கை

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையால் நிகழும் இந்த சம்பவங்களே இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதற்குள்ளாக அந்நிறுவனம் மற்றொரு ஆய்வறிக்கை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. ஹிண்டன்பர்க் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛விரைவில் புதிய அறிக்கை - மற்றொரு பெரிய நிறுவனம்’ என பதிவிட்டுள்ளது. ஹிண்டன்பர்க் வலையில் அடுத்து சிக்கப்போவது இந்திய நிறுவனமா அல்லது வேறொரு நாட்டின் நிறுவனமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்