பாட்னா: மக்களிடையே அதிகரித்துள்ள இந்து என்ற உணர்வு பாஜகவை வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வைக்கும். மிகப் பெரிய வெற்றி கிடைக்கும். ஆனால் மோடி மேஜிக் இந்த முறை பெரும் பங்காற்றாது என்று மூத்த பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.
பாஜகவுக்குள் இருந்து கொண்டே பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக அடிக்கடி கருத்துக்களைக் கூறி வருபவர் சுப்பிரமணியன் சாமி. குறிப்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக விமர்சிப்பவர். இவரை பாஜக தலைமை பெரிதாக கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.
இந்த நிலையில் பாட்னாவுக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது லோக்சபாதேர்தலில் பாஜகவின் வாய்ப்பு குறித்து அவரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு சாமி பதிலளிக்கையில், மக்களிடையே மிகப் பெரிய அளவில் இந்துத்தவ உணர்வு அதிகரித்துக் காணப்படுகிறது. இந்து என்பது குறித்து பெருமிதம் காட்ட ஆரம்பித்துள்ளனர் மக்கள். அது பாகவை கரையேற்றி விடும். மிகப் பெரிய வெற்றியே கிடைக்கும்.

வருகிற லோக்சபா தேர்தலில் இந்த முறை மோடி மாஜிக் வெற்றி பெறாது, எடுபடாது, அது முடிந்து போய் விட்டது. பாஜகவும் சரி அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்ஸும் சரி தனி நபர்களை நம்பி செயல்படுவதில்லை. சிந்தாந்தமும், அமைப்பும்தான் இங்கு முக்கியமானது, பிரதானமானது.
முதல் முறையாக நாட்டில் உள்ள இந்துக்களிடேயே நாம் இந்துக்கள் என்ற உணர்வு மேலோங்கியுள்ளது. தங்களது அடையாளம் குறித்து பெருமைப்படுகிறார்கள். நேரு காலத்தில் திணிக்கப்பட்ட வித்தியாசமான எண்ணங்களிலிருந்து அவர்கள் விடுபட ஆரம்பித்துள்ளனர். ஆனால் இதற்கெல்லாம் மோடியோ, மற்றவர்களோ காரணம் கிடையாது.
நிதீஷ் குமார் எப்போதுமே நம்மவர்தான். அவர் ஏன் நம்மை விட்டுப் போனார் என்பதுதான் ஆச்சரியமாக இருந்தது. அவர் புத்திசாலி, தவறுகளை கற்றுக் கொண்டு விட்டார். இந்து உணர்வுகளுக்கு எதிராக போவது ஆபத்து என்பதை உணர்ந்து விட்டார். இதனால்தான் பாஜகவுடன் மீண்டும் இணைந்து விட்டார்.
ராகுல் காந்தியும், அவரது தாயாரும் விரைவில் சிறைக்குப் போவார்கள். அதை நான் பார்ப்பேன் என்று கூறினார் சுப்பிரமணியன் சாமி.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}