பாட்னா: மக்களிடையே அதிகரித்துள்ள இந்து என்ற உணர்வு பாஜகவை வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வைக்கும். மிகப் பெரிய வெற்றி கிடைக்கும். ஆனால் மோடி மேஜிக் இந்த முறை பெரும் பங்காற்றாது என்று மூத்த பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.
பாஜகவுக்குள் இருந்து கொண்டே பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக அடிக்கடி கருத்துக்களைக் கூறி வருபவர் சுப்பிரமணியன் சாமி. குறிப்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக விமர்சிப்பவர். இவரை பாஜக தலைமை பெரிதாக கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.
இந்த நிலையில் பாட்னாவுக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது லோக்சபாதேர்தலில் பாஜகவின் வாய்ப்பு குறித்து அவரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு சாமி பதிலளிக்கையில், மக்களிடையே மிகப் பெரிய அளவில் இந்துத்தவ உணர்வு அதிகரித்துக் காணப்படுகிறது. இந்து என்பது குறித்து பெருமிதம் காட்ட ஆரம்பித்துள்ளனர் மக்கள். அது பாகவை கரையேற்றி விடும். மிகப் பெரிய வெற்றியே கிடைக்கும்.
வருகிற லோக்சபா தேர்தலில் இந்த முறை மோடி மாஜிக் வெற்றி பெறாது, எடுபடாது, அது முடிந்து போய் விட்டது. பாஜகவும் சரி அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்ஸும் சரி தனி நபர்களை நம்பி செயல்படுவதில்லை. சிந்தாந்தமும், அமைப்பும்தான் இங்கு முக்கியமானது, பிரதானமானது.
முதல் முறையாக நாட்டில் உள்ள இந்துக்களிடேயே நாம் இந்துக்கள் என்ற உணர்வு மேலோங்கியுள்ளது. தங்களது அடையாளம் குறித்து பெருமைப்படுகிறார்கள். நேரு காலத்தில் திணிக்கப்பட்ட வித்தியாசமான எண்ணங்களிலிருந்து அவர்கள் விடுபட ஆரம்பித்துள்ளனர். ஆனால் இதற்கெல்லாம் மோடியோ, மற்றவர்களோ காரணம் கிடையாது.
நிதீஷ் குமார் எப்போதுமே நம்மவர்தான். அவர் ஏன் நம்மை விட்டுப் போனார் என்பதுதான் ஆச்சரியமாக இருந்தது. அவர் புத்திசாலி, தவறுகளை கற்றுக் கொண்டு விட்டார். இந்து உணர்வுகளுக்கு எதிராக போவது ஆபத்து என்பதை உணர்ந்து விட்டார். இதனால்தான் பாஜகவுடன் மீண்டும் இணைந்து விட்டார்.
ராகுல் காந்தியும், அவரது தாயாரும் விரைவில் சிறைக்குப் போவார்கள். அதை நான் பார்ப்பேன் என்று கூறினார் சுப்பிரமணியன் சாமி.
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
{{comments.comment}}