ஒகேனக்கலில்.. மீண்டும் நீர் வரத்து அதிகரிப்பு.. அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை!

Aug 12, 2024,04:46 PM IST

சென்னை:ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால்  அருவிகளில் குளிக்கவும் ஆற்றில் பரிசல் இயக்கவும்  தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் காவிரி பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக பெய்த தொடர் கன மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் கர்நாடகா அணிகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் அதிகரித்தது. இதன் எதிரொலியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால்  தொடர்ந்து அருவிகளில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த ஒரு வாரமாக மழையின் அளவு குறைந்து நீர் வரத்தும் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. 



இந்த நிலையில் தற்போது மீண்டும் கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அணைகளின் நீர்மட்டமும் மீண்டும் உயர தொடங்கியுள்ளது. இதனால் தமிழ்நாடு எல்லையான பில்லி குண்டுலுவில் நேற்று 20,000 கனடியாக இருந்த நீர்வரத்து தற்போது அதிகரித்து 30,000 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக 27 வது நாளாகவும் அருவி மற்றும் ஆற்றுப் பகுதிகளில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்