ஒகேனக்கலில்.. மீண்டும் நீர் வரத்து அதிகரிப்பு.. அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை!

Aug 12, 2024,04:46 PM IST

சென்னை:ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால்  அருவிகளில் குளிக்கவும் ஆற்றில் பரிசல் இயக்கவும்  தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் காவிரி பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக பெய்த தொடர் கன மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் கர்நாடகா அணிகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் அதிகரித்தது. இதன் எதிரொலியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால்  தொடர்ந்து அருவிகளில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த ஒரு வாரமாக மழையின் அளவு குறைந்து நீர் வரத்தும் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. 



இந்த நிலையில் தற்போது மீண்டும் கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அணைகளின் நீர்மட்டமும் மீண்டும் உயர தொடங்கியுள்ளது. இதனால் தமிழ்நாடு எல்லையான பில்லி குண்டுலுவில் நேற்று 20,000 கனடியாக இருந்த நீர்வரத்து தற்போது அதிகரித்து 30,000 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக 27 வது நாளாகவும் அருவி மற்றும் ஆற்றுப் பகுதிகளில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்