காந்திநகர்: காந்தி நகர் தொகுதியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் காந்திநகர் தொகுதி பாஜகவின் கோட்டையாகவே உள்ளது. முன்னாள் துணை பிரதமரான எல்.கே.அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் போட்டியிட்டு வென்ற தொகுதி இது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக பாஜக குஜராத்தை ஆண்டு வருகிறது. பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் சொந்த மாநிலம் என்பதால், பாஜக தொடர் வெற்றியை குஜராத்தில் சந்தித்து வருகிறது. கடந்த 2014 மற்றும் 2019ல் நடைபெற்ற லோக்சபா தேர்தல்களிலும் பாஜக அபார வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 2024ம் ஆண்டிற்கான தேர்தலில் காந்திநகர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் மத்திய உள்துறை அமைச்சரான அமிதஷா போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் சோனால் ராமன்பாய் பட்டேல் போட்டியிட்டார். இந்த தொகுதியில் 12 பேர் களத்தில் இருந்தாலும் அமித்ஷா, சோனால் பட்டேல் இடையே தான் கடும் போட்டி நிலவி வந்தது. இருப்பினும், தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து அமித்ஷாவே முன்னிலையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் மதியம் வெளியான அறிவிப்பின் படி அமித்ஷா அபார வெற்றி பெற்றார். காந்திநகரில் அமித்ஷா வெற்றி பெறுவது இது முதல் முறை அல்ல. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 5,57,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?
தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு
சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்
திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!
கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்
70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?
நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!
{{comments.comment}}