சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 5 நாட்கள் சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் வெயில் அதிகரித்து வருகிறது. வட தமிழ்நாட்டில் அதிகாலையில் பனி மூட்டம் தொடர்கிறது. அதேசமயம், பகலில் வெயில் சுட்டெரிக்கிறது.

இந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிலும் அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அதேசமயம், அதிகாலையில் நி்லவும் பனிமூட்டம் அடுத்த 2 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் அதிகபட்ச வெப்ப நிலை 36.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. குறைந்தபட்ச வெப்ப நிலையும் அதே கரூர் பரமத்தியில்தான், 16 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்...முதல்வர் அறிவிப்பு
இதில் தான் திமுக-அதிமுக இடையே போட்டி...சீமான் சொன்ன புதிய தகவல்
திமுக.,வுக்கு பாஜக., வைக்கும் "செக்"...நயினார் எழுதிய கடிதத்திற்கு பின்னால் இவ்வளவு அரசியலா?
தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
சாத்தனூர் அணை.. லீவு கிடைச்சா இங்க போக மறக்காதீங்க.. சூப்பர் பிக்னிக் ஸ்பாட்!
திருப்பதி லட்டு பிரசாதம்...2025 ம் ஆண்டில் விற்பனையில் புதிய சாதனை
துணிச்சல்
வெள்ளனையே எந்திருச்சு.. வாசக் கூட்டி சாணி தெளிச்சு.. மாமன் மகளே!
வெனிசுலா அதிபர் சிறைபிடிக்கப்பட்டு, நாடு கடத்தல்...டிரெம்ப் அறிவிப்பு
{{comments.comment}}