வெயில் அதிகரிக்கும்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே.. IMD Chennai எச்சரிக்கை

Feb 16, 2025,03:17 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 5 நாட்கள் சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.


தமிழ்நாடு முழுவதும் வெயில் அதிகரித்து வருகிறது. வட தமிழ்நாட்டில் அதிகாலையில் பனி மூட்டம் தொடர்கிறது. அதேசமயம், பகலில் வெயில் சுட்டெரிக்கிறது.




இந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிலும் அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.


அதேசமயம், அதிகாலையில் நி்லவும் பனிமூட்டம் அடுத்த 2 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் அதிகபட்ச வெப்ப நிலை 36.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. குறைந்தபட்ச வெப்ப நிலையும் அதே கரூர் பரமத்தியில்தான், 16 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை

news

தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை

news

இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?

news

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்

news

Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!

news

கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?

news

சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!

news

Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!

news

இயற்கை ஒரு மாபெரும் ஆசிரியர்... The greatest lessons I have learnt is

அதிகம் பார்க்கும் செய்திகள்