சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 5 நாட்கள் சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் வெயில் அதிகரித்து வருகிறது. வட தமிழ்நாட்டில் அதிகாலையில் பனி மூட்டம் தொடர்கிறது. அதேசமயம், பகலில் வெயில் சுட்டெரிக்கிறது.
இந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிலும் அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அதேசமயம், அதிகாலையில் நி்லவும் பனிமூட்டம் அடுத்த 2 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் அதிகபட்ச வெப்ப நிலை 36.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. குறைந்தபட்ச வெப்ப நிலையும் அதே கரூர் பரமத்தியில்தான், 16 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.
தமிழகத்தில் இன்று12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!
மலைகளின் மாநாட்டை தொடர்ந்து... கடல் மாநாடு நடத்த கடலுக்குள் சென்று ஆய்வு செய்த சீமான்!
விஜய்யை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால் கண்டிப்பாக கைது செய்வார்கள்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி!
வரும் வாரங்களில் விஜய் பிரச்சாரங்களை தவிர்த்து... பொதுக் கூட்டங்களை நடத்தி கொள்ள வேண்டும்: சீமான்
கரூர் சம்பவத்தில்.. விஜய் மட்டுமே முதன்மைக் குற்றவாளி அல்ல.. அண்ணாமலை பேச்சு
கரூர் சம்பவம்..ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள்..முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
விஜய்யிடம் நிறைய நிறைய தொண்டர்கள் இருக்கிறார்கள்.. தலைவர்கள்தான் அர்ஜென்ட்டாக தேவை!
கச்சா எண்ணெய் இடத்தைப் பிடித்த தங்கம்.. எதில் தெரியுமா.. அதிர வைக்கும் தகவல்!
எடப்பாடி பழனிச்சாமிக்கு பேனர் வைக்கும் தவெக.. அதிமுக கூட்டணி உருவாகுமா.. அப்ப பாஜக?
{{comments.comment}}