அயோத்தி: பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அன்று ராமர் கோவிலின் உச்சியில் தர்ம கொடியை ஏற்றி வைத்தார். இது கோவிலின் அதிகாரப்பூர்வ நிறைவைக் குறித்தது. மேலும், இது "500 ஆண்டுகால உறுதிமொழி" நிறைவேறியதாக அவர் தெரிவித்தார். வழக்கமான கொடியேற்றும் முறையில் கயிற்றை இழுத்து கொடியை விரிக்கும் முறைக்கு மாறாக, ஒரு புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
ஸ்ரீராமர் பிறந்த அயோத்தி ராம ஜென்ம பூமியில் 2024ம் ஆண்டு பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு, திறக்கப்பட்டது. இக்கோவிலில் தொடர்ந்து கட்டுமான பணிகள் நடந்து வந்தது. கட்டுமானப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்ததை அடுத்து, நேற்று காலை கோவிலின் உச்சியில், பிரதமர் மோடி காவி கொடியை ஏற்றும் நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் வழக்கமான கொடியேற்றும் முறையை போல் கயிறை இழுக்காமலும், ஸ்விட்சை அழுத்தாமலும் புதிய தொழில்நுட்ப முறையில் கொடி ஏற்றப்பட்டது. இந்த தொழில்நுட்ப முறையை பற்றி பலரும் கூகுளில் தேடி வருகிறார்கள்.

புதிய கொடியேற்றும் முறையில், வேத மந்திரங்கள் ஓதப்பட்ட பிறகு, பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரிடம் ஒரு வெள்ளை நிற பலகை வழங்கப்பட்டது. அதில், இரண்டு கைகள் கூப்பிய நிலையில் இருக்கும் ஒரு அடையாள குறியீடு இருந்தது. பலகையின் பக்கவாட்டு பக்கமாக திரும்பி இருந்த கை கூப்பி வணங்கும் குறியீட்டை, பிரதமர் மோடியும், மோகன் பகவத்தும் இணைந்தும் லேசாக திருப்பி, நேராக திருப்பி வைத்தனர். அதை திருப்பியதும், அருகில் இருந்த பீடத்தின் மீது இருந்த கொடி, கயிறு மூலமாக தானாக மெல்ல மெல்ல கோவிலின் கோபுர உச்சிக்கு சென்றது.
22 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்ட இந்த காவி நிறக் கொடி, பாராசூட் தர துணியால் ஆனது. இது ஒரு தடிமனான நைலான் கயிற்றைக் கொண்டு கோவிலின் உச்சியில் ஏற்றப்பட்டுள்ளது. இது 161 அடி உயர கோபுரத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ளது. கொடியில் சூரியன் சின்னம் உள்ளது. இது ராமர் பகவானின் சூர்ய வம்சத்தைக் குறிக்கிறது. மேலும், ஓம் மற்றும் கோவிதாரா மரத்தின் சின்னங்களும் உள்ளன. கோவிதாரா மரம், ராம் ராஜ்யத்தின் மாநில மரமாக விவரிக்கப்படுகிறது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}