- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: கீரைகளிலேயே சிறந்த கீரை எது தெரியுமா?.. தெரியலையா.. சரி, அது கிடக்கட்டும்.. நாம இப்ப அரைக்கீரையைப் பற்றிப் பார்ப்போம். அரைக்கீரை புளி கடையல் செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா.. சூப்பரா இருக்கும் தெரியுமா.. அதை விட முக்கியமானது, ஹெல்த்தியான டிஷ் இது.
சரி வாங்க, டைம் வேஸ்ட் பண்ணாம கிச்சனுக்குள் போய்ருவோம்.

தேவையான பொருட்கள்
1. அரைக்கீரை ஆய்ந்தது ஒரு பெரிய 1 கப்.
2. சிறிய வெங்காயம் 6 உரித்தது.
3. பூண்டு ஆறு பல்
4. சீரகம் ஒரு ஸ்பூன்
5. தக்காளி 1 கட் செய்யவும்
6. வர மிளகாய் 4 .
7. நல்லெண்ணெய் 4 ஸ்பூன்.
8. வெந்தயம் 1/4 ஸ்பூன்
9. புளி அரை நெல்லி சைஸ்
10. உப்பு காரம் தேவைக்கு ஏற்ப
செய்முறை:
ஒரு கடாயில் அரைக்கீரை ஆய்ந்து கழுவியது போடவும். அதனுடன் சிறிய வெங்காயம் , பூண்டு, வர மிளகாய், சீரகம், புளி , தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும் . இவை அனைத்தும் ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் பல்ஸ் மோடில் கொரகொரப்பாக அரைக்கவும். அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி ஒரு சிறிய வெங்காயம் பூண்டு தட்டிக் கொண்டு அதனுடன் போடவும்.
சீரகம் வரமிளகாய் அதனுடன் போடவும். வெந்தயம் போடவும் பிறகு மிக்ஸியில் போட்ட கீரையை எண்ணெயில் போட்டு நன்றாக கிளறவும். நல்லெண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
சூடான சாதத்துடன் அரைக்கீரை புளி கடையல் அருமையாக இருக்கும். வேலைக்கு செல்பவர் லஞ்ச் பாக்ஸிலும்,கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் பிடித்தமான கடையல்உணவு.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்...ரிக்டரில் 6.7 ஆக பதிவு
அதிமுக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக
திருப்பரங்குன்றம் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு
கூட்டணிக்கு யாரும் வரல...தேர்தல் திட்டம் இதுவா...என்ன செய்ய போகிறார் விஜய்?
இன்று மாலை வீட்டில் விளக்கேற்றுங்க...நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
ஜனநாயகன் படத்தை 10ம் தேதி ஏன் தள்ளி வைக்கக் கூடாது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி
காணாமல் போன வைர மாலை (ஒரு பக்க சிறுகதை)
தமிழகத்தில் வச்சு செய்யப்போகும் கனமழை... எப்போ, எங்கெல்லாம் என்று தெரியுமா?
திமுக இனியாவது நீதிமன்ற தீர்ப்பினை மதிக்க வேண்டும்: அண்ணாலை
{{comments.comment}}