அரைக்கீரை புளி கடையல் .. சத்தானது, சுவையானது.. கர்ப்பிணிகளுக்கு மிக மிக உகந்தது!

Jan 29, 2025,02:34 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சென்னை: கீரைகளிலேயே சிறந்த கீரை எது தெரியுமா?.. தெரியலையா.. சரி, அது கிடக்கட்டும்.. நாம இப்ப அரைக்கீரையைப் பற்றிப் பார்ப்போம். அரைக்கீரை புளி கடையல் செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா.. சூப்பரா இருக்கும் தெரியுமா.. அதை விட முக்கியமானது, ஹெல்த்தியான டிஷ் இது. 


சரி வாங்க, டைம் வேஸ்ட் பண்ணாம கிச்சனுக்குள் போய்ருவோம்.


  


தேவையான பொருட்கள் 


1. அரைக்கீரை ஆய்ந்தது ஒரு பெரிய 1 கப்.

2. சிறிய வெங்காயம் 6 உரித்தது.

3. பூண்டு ஆறு பல் 

4. சீரகம் ஒரு ஸ்பூன்

5. தக்காளி 1 கட் செய்யவும்

6. வர மிளகாய் 4 .

7. நல்லெண்ணெய் 4 ஸ்பூன். 

8. வெந்தயம் 1/4 ஸ்பூன்

9. புளி அரை நெல்லி சைஸ் 

10. உப்பு காரம் தேவைக்கு ஏற்ப 


செய்முறை: 


ஒரு கடாயில் அரைக்கீரை ஆய்ந்து கழுவியது போடவும். அதனுடன் சிறிய வெங்காயம் , பூண்டு, வர மிளகாய், சீரகம், புளி , தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.


தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும் . இவை அனைத்தும் ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் பல்ஸ் மோடில் கொரகொரப்பாக அரைக்கவும். அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி ஒரு சிறிய வெங்காயம் பூண்டு தட்டிக் கொண்டு அதனுடன் போடவும்.


சீரகம் வரமிளகாய் அதனுடன் போடவும். வெந்தயம் போடவும் பிறகு மிக்ஸியில் போட்ட கீரையை எண்ணெயில் போட்டு நன்றாக கிளறவும். நல்லெண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். 


சூடான சாதத்துடன் அரைக்கீரை புளி கடையல் அருமையாக இருக்கும். வேலைக்கு செல்பவர் லஞ்ச் பாக்ஸிலும்,கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் பிடித்தமான கடையல்உணவு.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக

news

என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!

news

அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!

news

கண்ணும் கண்ணும் நோக்கினால்!

news

அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?

news

ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)

news

Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. விளக்கேற்றிய விரல்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்