- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: கீரைகளிலேயே சிறந்த கீரை எது தெரியுமா?.. தெரியலையா.. சரி, அது கிடக்கட்டும்.. நாம இப்ப அரைக்கீரையைப் பற்றிப் பார்ப்போம். அரைக்கீரை புளி கடையல் செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா.. சூப்பரா இருக்கும் தெரியுமா.. அதை விட முக்கியமானது, ஹெல்த்தியான டிஷ் இது.
சரி வாங்க, டைம் வேஸ்ட் பண்ணாம கிச்சனுக்குள் போய்ருவோம்.

தேவையான பொருட்கள்
1. அரைக்கீரை ஆய்ந்தது ஒரு பெரிய 1 கப்.
2. சிறிய வெங்காயம் 6 உரித்தது.
3. பூண்டு ஆறு பல்
4. சீரகம் ஒரு ஸ்பூன்
5. தக்காளி 1 கட் செய்யவும்
6. வர மிளகாய் 4 .
7. நல்லெண்ணெய் 4 ஸ்பூன்.
8. வெந்தயம் 1/4 ஸ்பூன்
9. புளி அரை நெல்லி சைஸ்
10. உப்பு காரம் தேவைக்கு ஏற்ப
செய்முறை:
ஒரு கடாயில் அரைக்கீரை ஆய்ந்து கழுவியது போடவும். அதனுடன் சிறிய வெங்காயம் , பூண்டு, வர மிளகாய், சீரகம், புளி , தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும் . இவை அனைத்தும் ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் பல்ஸ் மோடில் கொரகொரப்பாக அரைக்கவும். அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி ஒரு சிறிய வெங்காயம் பூண்டு தட்டிக் கொண்டு அதனுடன் போடவும்.
சீரகம் வரமிளகாய் அதனுடன் போடவும். வெந்தயம் போடவும் பிறகு மிக்ஸியில் போட்ட கீரையை எண்ணெயில் போட்டு நன்றாக கிளறவும். நல்லெண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
சூடான சாதத்துடன் அரைக்கீரை புளி கடையல் அருமையாக இருக்கும். வேலைக்கு செல்பவர் லஞ்ச் பாக்ஸிலும்,கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் பிடித்தமான கடையல்உணவு.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
கடந்த 2 நாட்களாக அமைதியாக இருந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்தது... எவ்வளவு குறைவு தெரியுமா?
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.. அவ்வளவு நன்மைகள் உள்ளன கோவிலுக்கு செல்வதில்!
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
முதல் முறையாக.. சொன்ன நேரத்துக்கு முன்பே வந்து சேர்ந்த தவெக தலைவர் விஜய்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 09, 2025... இன்று வெற்றிகள் அதிகரிக்கும்
தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டில் இடம் பெற்ற ஒரு பெண்ணின் பெயர்.. யார் அவர்?
விழாக்கோலம் பூண்ட புதுச்சேரி.. சீக்கிரமே வந்து விஜய்.. பேச்சைக் கேட்க திரண்ட தவெக தொண்டர்கள்!
{{comments.comment}}