- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: கீரைகளிலேயே சிறந்த கீரை எது தெரியுமா?.. தெரியலையா.. சரி, அது கிடக்கட்டும்.. நாம இப்ப அரைக்கீரையைப் பற்றிப் பார்ப்போம். அரைக்கீரை புளி கடையல் செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா.. சூப்பரா இருக்கும் தெரியுமா.. அதை விட முக்கியமானது, ஹெல்த்தியான டிஷ் இது.
சரி வாங்க, டைம் வேஸ்ட் பண்ணாம கிச்சனுக்குள் போய்ருவோம்.

தேவையான பொருட்கள்
1. அரைக்கீரை ஆய்ந்தது ஒரு பெரிய 1 கப்.
2. சிறிய வெங்காயம் 6 உரித்தது.
3. பூண்டு ஆறு பல்
4. சீரகம் ஒரு ஸ்பூன்
5. தக்காளி 1 கட் செய்யவும்
6. வர மிளகாய் 4 .
7. நல்லெண்ணெய் 4 ஸ்பூன்.
8. வெந்தயம் 1/4 ஸ்பூன்
9. புளி அரை நெல்லி சைஸ்
10. உப்பு காரம் தேவைக்கு ஏற்ப
செய்முறை:
ஒரு கடாயில் அரைக்கீரை ஆய்ந்து கழுவியது போடவும். அதனுடன் சிறிய வெங்காயம் , பூண்டு, வர மிளகாய், சீரகம், புளி , தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும் . இவை அனைத்தும் ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் பல்ஸ் மோடில் கொரகொரப்பாக அரைக்கவும். அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி ஒரு சிறிய வெங்காயம் பூண்டு தட்டிக் கொண்டு அதனுடன் போடவும்.
சீரகம் வரமிளகாய் அதனுடன் போடவும். வெந்தயம் போடவும் பிறகு மிக்ஸியில் போட்ட கீரையை எண்ணெயில் போட்டு நன்றாக கிளறவும். நல்லெண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
சூடான சாதத்துடன் அரைக்கீரை புளி கடையல் அருமையாக இருக்கும். வேலைக்கு செல்பவர் லஞ்ச் பாக்ஸிலும்,கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் பிடித்தமான கடையல்உணவு.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விஜய்க்கு "விஜயகாந்த்" மூலம் செக் வைத்த திமுக.. கருணாநிதி விட்டதைப் பிடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக.. முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு
2016லேயே நடந்திருக்க வேண்டியது.. தாமதமாக திமுக கூட்டணிக்கு வந்துள்ளோம்.. பிரேமலதா விஜயகாந்த்
திமுக-தேமுதிக கூட்டணி.. கேப்டனின் ஆன்மா மன்னிக்காது: தமிழக பாஜக எக்ஸ் தள பதிவு!
தேமுதிகவின் புதிய பயணம்... இப்ப எந்த நிலையில் இருக்கிறது தேமுதிகவின் வாக்கு வங்கி?
இனி ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.2000 வழங்கப்படும்: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!
தமிழகத்தில் தேனி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!
நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!
திமுகவுடன் கூட்டணி.. தேமுதிகவிலிருந்து ஏற்கனவே போனவர்கள் நிலை என்னாகும்?
{{comments.comment}}