- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: வெளில நல்லா மழை பெய்யுது.. சூடா டீ சாப்பிட்டுட்டே.. அப்படியே இளையராஜா பாட்டு கேட்டுட்டே.. இப்படியே இருந்தா எப்படிப்பா.. மத்தியானம் ஆயிருச்சு.. பசிக்கும்ல.. கரெக்ட்!
பசிக்கும்போது, அதுவும் இந்த மழை நேரத்துல பசிக்கும் போது, சூடா சாதம் வடிச்சு, அப்படியே கொள்ளு ரசம் வச்சு சாப்ட்டா எப்படி இருக்கும் தெரியுமா.. அட நல்லாத்தாங்க இருக்கும்.. வாங்க கொள்ளு ரசம் எப்படி வைக்கணும்னு முதல்ல பார்க்கலாம்.. கிச்சனுக்குள்ள குடுகுடுனு ஓடியாங்க!

தேவையான பொருட்கள்
கொள்ளு - 1 கப்
மிளகு, சீரகம் வரமல்லி, கடலைப்பருப்பு - தலா ஒரு ஸ்பூன்
வர மிளகாய் - 3 + 2
வெந்தயம் - கால் ஸ்பூன்
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு (தண்ணீரில் கரைத்து வைக்கவும்)
பெருங்காயம், மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை, மல்லித்தழை - ஒரு கைப்பிடி
எண்ணெய், கடுகு, உப்பு -ஒரு ஸ்பூன்
செய்முறை
1. கொள்ளு +3 கப் தண்ணீர் ஊற்றி + பெருங்காயம் + உப்பு + மஞ்சள் போட்டு குக்கரில் வேக வைக்கவும் (நான்கு அல்லது ஐந்து விசில் விடவும்)
2. ஆறிய பிறகு கொள்ளு தண்ணீரை வடித்துக் கொள்ளவும்
3. டிரை வாணலியில் வறுத்து பொடி செய்ய வேண்டியவை - கடலைப் பருப்பு, வரமிளகாய் + வர மல்லி + வெந்தயம் + சீரகம் + மிளகு கறிவேப்பிலை வறுத்து பொடி செய்யவும் (மிக்ஸியில்)
4. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு + உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். வர மிளகாய் 2, சீரகம், மிளகு வறுத்த பொடியை போட்டு சிம்மில் வறுக்கவும்
5. புளிக் கரைசல் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
6. புளி வாசம் போன பிறகு கொள்ளு தண்ணீர் ஊற்றி நுரை கட்டியதும் அடுப்பை அணைத்து விடவும்
இந்த ரசத்தை சர்விங் பவுலுக்கு மாத்திட்டா கமகமன்னு கொள்ளு ரசம் ரெடி.. வச்சு சாப்பட்டு பாருங்க.. மழையை நிக்காமல் இன்னும் கொஞ்சம் பெய்யேன் என்று சொல்லத் தோன்றும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. விளக்கேற்றிய விரல்கள்!
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
{{comments.comment}}