- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: வெளில நல்லா மழை பெய்யுது.. சூடா டீ சாப்பிட்டுட்டே.. அப்படியே இளையராஜா பாட்டு கேட்டுட்டே.. இப்படியே இருந்தா எப்படிப்பா.. மத்தியானம் ஆயிருச்சு.. பசிக்கும்ல.. கரெக்ட்!
பசிக்கும்போது, அதுவும் இந்த மழை நேரத்துல பசிக்கும் போது, சூடா சாதம் வடிச்சு, அப்படியே கொள்ளு ரசம் வச்சு சாப்ட்டா எப்படி இருக்கும் தெரியுமா.. அட நல்லாத்தாங்க இருக்கும்.. வாங்க கொள்ளு ரசம் எப்படி வைக்கணும்னு முதல்ல பார்க்கலாம்.. கிச்சனுக்குள்ள குடுகுடுனு ஓடியாங்க!

தேவையான பொருட்கள்
கொள்ளு - 1 கப்
மிளகு, சீரகம் வரமல்லி, கடலைப்பருப்பு - தலா ஒரு ஸ்பூன்
வர மிளகாய் - 3 + 2
வெந்தயம் - கால் ஸ்பூன்
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு (தண்ணீரில் கரைத்து வைக்கவும்)
பெருங்காயம், மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை, மல்லித்தழை - ஒரு கைப்பிடி
எண்ணெய், கடுகு, உப்பு -ஒரு ஸ்பூன்
செய்முறை
1. கொள்ளு +3 கப் தண்ணீர் ஊற்றி + பெருங்காயம் + உப்பு + மஞ்சள் போட்டு குக்கரில் வேக வைக்கவும் (நான்கு அல்லது ஐந்து விசில் விடவும்)
2. ஆறிய பிறகு கொள்ளு தண்ணீரை வடித்துக் கொள்ளவும்
3. டிரை வாணலியில் வறுத்து பொடி செய்ய வேண்டியவை - கடலைப் பருப்பு, வரமிளகாய் + வர மல்லி + வெந்தயம் + சீரகம் + மிளகு கறிவேப்பிலை வறுத்து பொடி செய்யவும் (மிக்ஸியில்)
4. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு + உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். வர மிளகாய் 2, சீரகம், மிளகு வறுத்த பொடியை போட்டு சிம்மில் வறுக்கவும்
5. புளிக் கரைசல் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
6. புளி வாசம் போன பிறகு கொள்ளு தண்ணீர் ஊற்றி நுரை கட்டியதும் அடுப்பை அணைத்து விடவும்
இந்த ரசத்தை சர்விங் பவுலுக்கு மாத்திட்டா கமகமன்னு கொள்ளு ரசம் ரெடி.. வச்சு சாப்பட்டு பாருங்க.. மழையை நிக்காமல் இன்னும் கொஞ்சம் பெய்யேன் என்று சொல்லத் தோன்றும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு...மாவட்ட வாரியாக நீக்கப்பட்டவர்கள் விபரம்
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக ஒழிக்கவே பெயர் மாற்றம் - திருமாவளவன்
செவிலியர்களுக்கு காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி
அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா? இல்லையா?... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
பிட்புல், ராட்வைலர் நாய்களை வளர்க்கக் கூடாது... மீறினால் 1 லட்சம் அபராதம்: மேயர் பிரியா!
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை...நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
விஜய் தான் களத்தில் இல்லை.. திடீரென வருகிறார்.. திடீரென காணாமல் போகிறார்: தமிழிசை செளந்தரராஜன்
ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள்... ஜன.,5ம் தேதிக்குள் வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவு!
{{comments.comment}}