- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: வெளில நல்லா மழை பெய்யுது.. சூடா டீ சாப்பிட்டுட்டே.. அப்படியே இளையராஜா பாட்டு கேட்டுட்டே.. இப்படியே இருந்தா எப்படிப்பா.. மத்தியானம் ஆயிருச்சு.. பசிக்கும்ல.. கரெக்ட்!
பசிக்கும்போது, அதுவும் இந்த மழை நேரத்துல பசிக்கும் போது, சூடா சாதம் வடிச்சு, அப்படியே கொள்ளு ரசம் வச்சு சாப்ட்டா எப்படி இருக்கும் தெரியுமா.. அட நல்லாத்தாங்க இருக்கும்.. வாங்க கொள்ளு ரசம் எப்படி வைக்கணும்னு முதல்ல பார்க்கலாம்.. கிச்சனுக்குள்ள குடுகுடுனு ஓடியாங்க!

தேவையான பொருட்கள்
கொள்ளு - 1 கப்
மிளகு, சீரகம் வரமல்லி, கடலைப்பருப்பு - தலா ஒரு ஸ்பூன்
வர மிளகாய் - 3 + 2
வெந்தயம் - கால் ஸ்பூன்
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு (தண்ணீரில் கரைத்து வைக்கவும்)
பெருங்காயம், மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை, மல்லித்தழை - ஒரு கைப்பிடி
எண்ணெய், கடுகு, உப்பு -ஒரு ஸ்பூன்
செய்முறை
1. கொள்ளு +3 கப் தண்ணீர் ஊற்றி + பெருங்காயம் + உப்பு + மஞ்சள் போட்டு குக்கரில் வேக வைக்கவும் (நான்கு அல்லது ஐந்து விசில் விடவும்)
2. ஆறிய பிறகு கொள்ளு தண்ணீரை வடித்துக் கொள்ளவும்
3. டிரை வாணலியில் வறுத்து பொடி செய்ய வேண்டியவை - கடலைப் பருப்பு, வரமிளகாய் + வர மல்லி + வெந்தயம் + சீரகம் + மிளகு கறிவேப்பிலை வறுத்து பொடி செய்யவும் (மிக்ஸியில்)
4. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு + உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். வர மிளகாய் 2, சீரகம், மிளகு வறுத்த பொடியை போட்டு சிம்மில் வறுக்கவும்
5. புளிக் கரைசல் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
6. புளி வாசம் போன பிறகு கொள்ளு தண்ணீர் ஊற்றி நுரை கட்டியதும் அடுப்பை அணைத்து விடவும்
இந்த ரசத்தை சர்விங் பவுலுக்கு மாத்திட்டா கமகமன்னு கொள்ளு ரசம் ரெடி.. வச்சு சாப்பட்டு பாருங்க.. மழையை நிக்காமல் இன்னும் கொஞ்சம் பெய்யேன் என்று சொல்லத் தோன்றும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}